Tuesday, June 17, 2008

குறட் கருத்து

             உந்தனது  கீழிருக்கும்  ஏழையர்கள்

                     உறவினர்கள்  நண்பரொடு  அன்பு கொண்டோர் 

             வந்தமைந்த மனைவி  அவள்  வழியாய் வந்த

                     வாரிசுகள்  என்றிவர்கள்  இடத்திலெல்லாம்

             நொந்தழிக்கும்  கோபமதைக்  கொள்ளல்  தீது

                     நொய்ந்தவர் மேல்  கோபமது  தீதோ தீது

             வந்த சினம்  தானாக மறைந்து விடும்

                      வாழும்   வழி சொல்லுகின்றார்  வள்ளுவரும்

   2.       இந்த  விதம் சொல்லி விட்டு வள்ளுவரும்

                       இடக்காகச் சொல்லுகின்றார் அதனைப் பார்ப்போம்

              மைந்தர்களே  உம்மை விடப்  பெரியோர்  ஆளும்

                      மாட்சிமையின்   அதிகாரப் பொறுப்பில்  உள்ளோர்

              எந்த விதத் தவறுகட்கும்  அஞ்சா நெஞ்சர்

                      இவரிடத்தில்      சினம் கொள்ளும்  தடுக்க மாட்டேன்

              சந்தடியில்  அடி  வாங்கித்தான்  திருந்த

                      சரியான  வழி  சொன்னார்  வள்ளுவரும்

                                     திருக்குறள்

               செல்லிடத்துக்  காப்பான்  சினம்      காப்பான் அல் இடத்துக்

               காக்கிலென்  காவாக்கால்  என்

0 மறுமொழிகள்: