Tuesday, July 15, 2008

குறட் கருத்து காமத்துப் பால்

ஊரார் பழிக்கின்றார் என்னவரைப் புரியாமல்
உண்மை நிலை தெரியாமல் எங்கேயும் எப்போதும்
வாராது போயிடுவார் என்றெங்கும் கூறுகின்றார்
வழக்குணரார் உணர்வாரா என்னவரின் பெருந்தன்மை
நேராய் என் நாணமும் அழகும் அவர் கொண்டார
நினைத்துணரக் காம நோயும் பசலையுமே எனக்களித்தார்
சீராய் இரண்டெடுத்தார் சிறப்பாய் இரண்டளித்தார்
ஊரார் அறியார் இவ்வுண்மை நிலை பழிக்கின்றார்


குறள்

சாயலும் நாணும் அவர் கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து

1 மறுமொழிகள்:

said...

அண்ணாச்சி, நல்லாயிருக்கு. அந்த குறுக்குத்துறை கதைகள் மாதிரி எழுதலாம்லா.