Tuesday, August 12, 2008

குறட் கருத்து

 அறிவதற்கு முயலாத மூடர் முன்னே 
  அறிவுடையார் பேசாமை பெருமை தரும்
  அதை விடுத்து அவர் முன்னர் பேசல் என்றல்
  அறிவுடையார் பெருமையெல்லாம் குலைத்துவிடும்
  அறிவுடையார் மூடர்கள் முன் பேசல் என்றல்
  அங்கணத்தில் அமிழ்தம் அதைக் கொட்டினாற் போல்
  அறிவுடையார் அதை அறிவார் பேச மாட்டார்
  அதுவே தான் அவர் தமக்குச் சிறப்பளிக்கும்

  குறள்
  அங்கணத்துள் உக்க அமிழ்து அற்றால் தம் கணத்தார்
  அல்லார் முன் கோட்டி கொளல்

0 மறுமொழிகள்: