Tuesday, August 31, 2010

உச்ச நீதி மன்றத் தீர்ப்பு

உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு அது
உணர்த்துவது மனிதனாக வாழு என்று
கச்சை கட்டி நிற்பதல்ல அரசியலும்
கண்ணியமாய் மக்களையே காப்பதற்கே
புத்தி கெட்டு வெறி கொண்டு உயிர் பறித்தல்
புல்லர்களின் செயல் என்று உணர்த்துவது
சத்தியமாய் நீதி இந்த நாட்டில் இன்றும்
சரியாக இருக்கிறது சில நேரத்தில்

Sunday, August 29, 2010

திறன் என்றே போற்றிடுவார்

ஊராரின் பிள்ளைகளை உணர்ச்சி யூட்டி
ஒரு நொடியில் தீக் குளித்து மாள வைப்பார்
சீராட்டி தம் மக்கள் நாட்டை யாள
செய்வ தெல்லாம் சரியாகச் செய்து வைப்பார்
தேரோட்டி மகன் கொன்ற மனுவைப் பற்றி
தினம் பேசி மேடைகளில் அழுதிடுவார்
பாராட்டித் தம் மகனின் தவறையெல்லாம்
பழந்தமிழர் திறன் என்றே போற்றிடுவார்

கேவலத்தில் உழல்வதைப் பார்

அவரவர்க்கு சிலை அவரே வைத்துக் கொள்ளும்
அளவிற்குக் தமிழ்நாட்டைக் கெடுத்து உள்ளார்
தவறதனை ஒழுக்கமாக்கி வாழ்ந் திருக்கும்
தலைவரவர் தன் குடும்பம் வாழ்வதற்காய்
கவலையின்றி இலவசங்கள் வழங்குகின்றார்
கையூட்டாய் மானமுள்ள தமிழருக்கு
உலகு போற்றும் முதற் பண்பைக் கொண்ட இனம்
உளம் இழந்துக் கேவலத்தில் உழல்வதைப் பார்

Saturday, August 28, 2010

என் தம்பி நாஞ்சில் நாடன்

அண்ணாச்சி என அழைக்கும் போதினிலே
அன்பு முகம் என் முன்னர் வந்து நிற்கும்
புண்ணாக்கிப் பார்ப்போர்கள் மத்தியிலே என்னைப்
புதிதாக்கிப் பார்க்கின்ற இனிய தம்பி
கண்ணோட்டம் என்னைப் போல் கொண்ட செல்வம்
கண்ணியத்தின் மொத்த உரு நாஞ்சில் நாடன்
முன்னோர்கள் செய்த தவம் தம்பி கொண்டேன்
முத்தமிழாள் அருளாலே தெம்பு கொண்டேன்

Friday, August 27, 2010

ஆண்டவரே என்ன சொல்வீர்

நாணமே யில்லாதார் பொறுப்புக் களில்
நாயகராய் அமர்ந்திருக்க அந்தோ அந்தோ
ஊனமுற்ற நாடாகத் தமிழர் நாடு
ஒலமிட வழியின்றி ஒடுங்கி நிற்க
கானம் ஒரு குடும்பம் மட்டும் பாடி நிற்க
கணக்கில்லா நல்லவர் வாய் மூடி நிற்க
ஆனதென்ன எம் நிலைமை இவ்வாறாக
ஆண்டவரே உம் நிலை தான் என்ன சொல்வீர்

Thursday, August 26, 2010

கோயிலும் தான் உனக்கில்லையே

தங்களுக்குத் தாங்களே சம்பளத்தைத்
தாறுமாறாய்க் கூட்டிக் கொள்ளும் தங்கங்களை
எங் களுக்கு நாடாளு மன்றத்திற்காய்
ஏன் தந்தாய் எம் இறைவா கோபம் என்ன
பங்கமிது என்றுணராப் பாவியர்கள்
பாவப்பட்ட மக்களையே நினைத்தாரில்லை
எங்களது மக்களவை எமக்கு இல்லை
என் செய்வாய் கோயிலும் தான் உனக்கில்லையே

Wednesday, August 25, 2010

விருதேயில்லை

ஆபாச அரசியலார் எல்லாம் இங்கே
அடுக்கடுக்காய் டாக்டர் பட்டம் வாங்கி விட்டார்
மேலான விளையாட்டாம் சதுரங்கத்தில்
மேனாட்டார் அனைவரையும் வென்று நின்ற
சீராளர் விஸ்வநாதன் கேட்கவில்லை
செப்பியது அரசாங்கம் பட்டம் என்று
ஊரெங்கும் தேசியக்கொடி யோடாடும்
உண்மையாளர் ஊர் குறித்துக் கேள்வி கேட்டு
வேரதனிலே வெந்நீரை ஊற்றி விட்டார்


நாராசமாக்கி விட்டார் நமது நாட்டின்
நலமறியா அரசாங்க அதிகாரிகள்
தாராளமாக இங்கு டாக்டர் பட்டம்
தருகின்றார் அனைவருக்கும் விலை தான் கூட
போராடி வெல்கின்ற விஸ்வநாதன்
போன்றோர் இவ் விருதையெல்லாம் வேண்டாம் என்றல்
பாராட்டுக்கு ரியதுதான் வாங்கினால்தான்
பரிதாபம் இதுவெல்லாம் விருதேயில்லை

Tuesday, August 24, 2010

காவ்யா (அமெரிக்கத் தமிழ்ப் பெண்

பன்னி ரேண்டே வயதான சிறுமி யவர்
பைந்தமிழர் மரபில் வந்த காவ்யாதான்
எண்ணுகையி லெங்கேயோ உயர்ந்து உள்ளார்
இப்போதே கல்லூரி படிக்கின்றாராம்
வண்ண மயக் கணிதத்தில் சாதனைகள்
வகை வகையாய்ப் புரிந் துள்ளார் இசையினிலும்
பின்னுகின்ற வயலினிலே பெரியவராம்
பிழையின்றித் தமிழ் படித்து எழுதுவாராம்

அன்னையவர் சொல்லுகின்றார் பிள்ளைகளை
அரவணைக்கும் வழியதனை மற்றவர்க்கு
மின்னுகின்ற காவ்யா அமெரிக் காவில்
மென்மேலும் வெற்றிகளைக் குவிக்க வேண்டும்
கண்ணழகுப் பெண்ணாளும் மிகச் சிறந்த
கணித வழி நூற்கள் பல எழுத வேண்டும்
பெண்ணாளின் அறிவுயர்ந்து உலகம் வெல்ல
பெரியவர்கள் அனைவருமே வாழ்த்தி நிற்போம்

துறவியன்று

கோவணம் தான் ஆடை கழுத்தில் ஒரு
குளிர் உருத்திராக்கம் அது மாலையாகும்
ஆவல் ஏதும் இல்லாதார் எங்கும் என்றும்
ஆண்டவனைத் தமிழ் பாடி துதித்து நிற்போர்
சாவடிகள் தனிலே தான் தங்கிக் கொள்வார்
சாப்பாடு எளிமையான உணவே ஆகும்
கோயில்களைச் சுத்தம் செய்வார் மக்களது
குறை களைய வழி சொல்வார் துறவி யன்று

பழசிராஜா

சாவதற்கு அஞ்சி நாட்டைக் காட்டித் தரும்
சளுக்கர்களின் மத்தியிலே நாடு காக்க
ஆவதெல்லாம் நாட்டிற்காய் ஆவதென்று
அந்நியரை எதிர்த்து வீரப் போர் புரிந்த
காவல் ராசன் பழசி ராஜா படத்தை நேற்று
கண்களிலே நீர் மல்க பார்த்திருந்தேன்
பாவம் அவன் போன்றோர் வாழ்ந்த நாட்டினிலே
பரத்தமையைக் கொண்டிருப்போர் ஆள்கின்றாரே

Saturday, August 21, 2010

நாடாளுமன்றமும் சம்பளமும்

மக்கள் சேவை செய்ய வந்த மாமனிதர்
மனம் போல சம்பளத்தை வேண்டுகின்றார்
தக்கவர்கள் ஒழிந்து விட்ட நாட்டில் இந்த
தரித்திரர்கள் தனைக் காக்க வேண்டும் என்றே
மக்களவை இவர்களுக்குச் சம்பளத்தை ஆகா
மனம் போன படி உயர்த்தித் தந்தும் இவர்
அக்கணமே காணா தென்று ஆடுகின்றார்
ஆடு மாடாய் மக்களினைக் காணுகின்றார்

Friday, August 20, 2010

ராஜீவ் காந்தி

கள்ளமில்லா வெள்ளை மனக் கண்ணியத்தான்
ககனமெல்லாம் புகழடைந்த கனி மொழியான்
உள்ளமெல்லாம் பாரதத்தின் உயர்விற்காக
ஒரு கோடிக் கனவுகளைக் கொண்டிருந்தான்
வெள்ளமென பல உயர்வைத் தந்த தாயான்
விரிமனத்தோன் உதவிக்கே உதவி நின்றோன்
நல்லவனாய் இருந்த தனித் தலைவன் அவன்
நாடு இன்றும் நினைந்து போற்றும் ராஜீவ் காந்தி

Sunday, August 15, 2010

விடுதலை பெற்றோம்

விடுதலை பெற்றோம் விடுதலை பெற்றோம்
வெண்மை உண்மை பெற்றோமா
விடுதலை பெற்றோம் விடுதலை பெற்றோம்
விரிந்த மனதைப் பெற்றோமா
விடுதலை பெற்றோம் விடுதலை பெற்றோம்
வீரம் விவேகம் பெற்றோமா
விடுதலை பெற்றோம் விடுதலை பெற்றோம்
வீழ்ந்தார் தம்மை நினைத்தோமா


விடுதலை பெற்றோம் விடுதலை பெற்றோம்
வீணர்கள் தம்மை ஆள விட
விடுதலை பெற்றோம் விடுதலை பெற்றோம்
வேதனை நம்மைச் சூழ்ந்து விட
விடுதலை பெற்றோம் விடுதலை பெற்றோம்
வெட்கம் விட்டவர் தலைமை கொள
விடுதலை பெற்றோம் விடுதலை பெற்றோம்
வெளி நாட்டவர்கள் வணிகம் செய

Tuesday, August 10, 2010

உரை நிகழ்த்துகின்றேன்

நற்பணி மன்றத்தினர் வாழ்த்துப் பெறுகின்றனர்

பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவனுக்கு பரிசு தருகின்றேன்

குடியரசுத் தலைவர் விருது பெற்ற பிச்சைக் குருக்கள் உரையாற்றுகின்றார்

இயக்குனர் முத்துராமன் அவர்களோடு உரையாடிக் கொண்டிருக்கின்றேன்

மக்கள்

காரைக்குடி நகரத்தார் இளைஞர் நற்பணி மன்றத்தின் வெள்ளி விழா


திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் அவர்கள் தலைமை உரை உடன் நானும் பிள்ளையார்பட்டி வேத பாடசாலையின் குருவும் அர்ச்சகருமான உத்தமர் பிச்சைக்குருக்கள்

Monday, August 9, 2010

வெயில் அங்காடித் தெரு குறித்து உரையாடிக் கொண்டிருந்தோம்

தம்பி காரைக்குடி கண்ணன் திரைப்பட இயக்குனர் வசந்த பாலன்


விடுதியில் மனம் நிறைந்து வாழ்த்தினேன்

பரிசு வழங்குகின்றேன்



06-08-2010

பரிசு வழங்குகின்றேன்


முதல்வர் குப்புசாமி தாளாளர் சிவசுப்ரமணியன்

மாணவர்களுக்கு பரிசு வழங்குகின்றேன்

தாளாளர் சிவசுப்ரமணியன் நினைவுப் பரிசு வழங்குகின்றார்

மாணவர்களும் பெற்றோர்களும்

கொங்கு பொறியியற் கல்லூரி


கல்லூரி முதல்வர் குப்புசாமி அவர்கள் சிவசுப்ரமணியன் பழனிச்சாமி அவர்கள்

கொங்கு பொறியியற் கல்லூரி புதிய மாணவர்கள் பெற்றோர்களுடன்


கொங்கு அறக்கட்டளைத் தாளாளர் அய்யா சிவசுப்ரமணியன் அவர்களோடு தலைவர் பழனிச்சாமி அவர்கள்

Monday, August 2, 2010

தோழர்களோடு தோழர் மகேந்திரன்

தம்பி நாஞ்சில் சம்பத் அவர்களும் நானும்

உரை நிகழ்த்துகின்றேன்


அண்ணண் தா.பா. தம்பி சம்பத்

கலை இலக்கியப் பெருமன்ற விழாவில்


அண்ணண் தோழர் தா.பாண்டியன் அவர்களோடும் அன்புத் தம்பி நாஞ்சில் சம்பத் அவர்களோடும்
01-08-2010 சிவகங்கை

Sunday, August 1, 2010

வழி காட்டப் பிறந்தோர் அன்றோ

உறவுகளை நட்பாக ஆக்கிக் கொள்ளும்
உயர் குணத்தைக் கொண்டாலே வெற்றி அன்றோ
சிறந்தோங்கும் நட்பை யெல்லாம் உறவாய் ஆக்கி
சீராக வாழ்வது நற் சிறப் பேயன்றோ
மறந்து விட்டோம் குறளாசான் தன்னை நாமும்
மனிதருக்கு என்னவெல்லாம் சொல்லித் தந்தான்
உயர்ந்திடுவோம் மனிதரென வாழ்வோம் நாமும்
உலகுக்கு வழி காட்டப் பிறந்தோர் அன்றோ

சம்பளமும் உயர்ந்ததம்மா

துன்பங்கள் அனுபவிப்பார் அவரைப் போலே
துடித்தழுது நிற்பவர்கள் யார் தான் உண்டு
இன்பம் என்ற வார்த்தை அவர் வாழ்க்கையிலே
என்றைக்குக் கண்டார்கள் அய்யோ பாவம்
புண்பட்ட அவர் வாழ்வில் இன்பம் சேர
பொறுப்பாக அரசு ஒருமுடிவெடுக்க
பண்பட்ட உறுப்பினர்கள் நாடாளுமன்றப்
பாவம் அவர் சம்பளமும் உயர்ந்ததம்மா