Wednesday, November 30, 2011

இறைவன் துணை

புரியாமல் வாழுகின்றேன் அன்பை நம்பி
போற்றுவோர் தூற்றுவோர் அனைவரிடம்
அறியாமல் வாழுகின்றேன் என்றே பலர்
ஆதங்கம் கொள்கின்றார் என்னிடத்தில்
சிறியாராய் அவர் நடந்தால் எனக்கு என்ன
சிந்தித்தே முறையாய்த் தான் வாழுகின்றேன்
வறியானாய் ஆனாலும் எந்தனது
வழி முறைகள் மாறாது இறைவன் துணை

Sunday, November 20, 2011

தாயருளால் என்னைக் காப்பாய்

குணமாக்கி எனைக் கொல்ல வேண்டும் அய்யா
கோமகனே உன் பாதம் பணிந்தே நின்றேன்
இரணமாக்கிக் கொல்கின்றார் உற்றார் நண்பர்
இரவெனினும் பகலெனினும் உந்தன் துணை
பிணமாக்கிப் பார்க்கின்றார் நிதமும் என்னை
பேணி நிற்கும் அன்பாலே வந்த வினை
கணமேனும் உனை மறவா அருளைத் தந்த
கண்ணுதலே தாயருளால் என்னைக் காப்பாய்

Sunday, November 13, 2011

திருமதி மதுமிதா திருமதி பரமேஸ்வரி திருமதி விஜயலட்சுமி திருமதி சக்திஜோதி

பாட்டையா என்று என மகன் சுகாவால் அன்போடு அழைக்கப்பட்ட் பாரதி மணியோடு

தம்பி மகள் ஆம் என அன்பு மகளோடும் மருமகனோடும்


பெரியப்பா என்று வாய் நிறைய கூப்பிடும் என் அன்பு மகளும் மருமகனும் வாழ்க வாழ்க என்று வாழ்த்தி மகிழ்கின்றேன்

தம்பி நாஞ்சில் நாடன் மகள் மருததுவர் சங்கீதா விவேகானந்தன் திருமண வரவேற்பு


நாள் 12-11-2011 சனிக்கிழமை மாலை