Monday, April 23, 2012

அபுதாபி நிகழ்ச்சி நிரல்

Friday, April 20, 2012

புரியவில்லை

அன்பும் உண்மையும் நேர்மையும் உள்ளத் தெளிவும் இல்லாதவர்கள் எழுதினால் அதில் ஒழுங்கும் உண்மையும் இருக்குமா.

பெற்ற தந்தையைப் பேணாமல் விட்டு விட்டு ஊரிலுள்ள தந்தையரைப் பற்றி எழுதினால் அதில் எப்படி நேர்மை இருக்கும்.

அன்பே வடிவாகப் பழகியவரிடம் மிக நன்றாகப் பழகி விட்டு அவரின் தூய அன்பை தனது நலங்களுக்காக அவமானம் செய்கின்றவர் நட்பு குறித்தும் அன்பு குறித்தும் எழுதுவது எப்படி எழுத்தாகும்.

பெரிய மனிதர்கள் என்ற வேடதாரிகளை தினம் தினம் வீட்டில்
போய்ப் பார்த்து விருதுகளுக்காக அவர்களை புகழ்ந்து விருது பெறுபவர்கள்
எப்படி சிறந்த எழுத்தாளர்கள்.

பெரிய நடிகர்களின் வீட்டு வாசலில் காத்துக் கிடந்து அதன் விளைவாக தமிழ் குறித்து மிகச் சிறப்பாக எதுவும் அறியாத அந்த நடிகர் இவர்களை பேரறிஞர் என்பதும் உடனே செய்தி ஊடகங்களில் அவரைப் பற்றிப் பேரறிஞர் என்று எழுதுவதும் போடுவதும் என்ன ஒழுங்கீனம்.

விருது வாங்கிக் கொடுக்கின்ற இடங்களை நீண்ட நாட்களாகத் தக்க வைத்துக் கொண்டு அதன் விளைவாகவே புதிய எழுத்தாளர்களை தன் வீடு தேடி வர வைத்துக் கொண்டு அதன் விளைவாக பலர் தங்களைப் பாராட்ட ஏற்பாடு செய்து கொள்ளும் பெரிய இடங்களில் இருக்கும் பெரிய மனிதர்களல்லாத சிலர் எப்படி அந்த இடங்களைத் தக்க வைத்துக் கொள்ளுகின்றார்கள்.

இந்த நாட்டில் விருதுகள் எப்படியெனில். நடிகர் தலகம் சிவாஜி கணேசனுக்கே விருது தராத நாடு இது. இயக்குநர் பாலு மஹேந்திரா தலைவராக இருந்த காலத்தில் அவர் விருப்பத்தில் அளித்த விருதுதான் தாதா பால்சாகேப் விருது.

விருதுகள் தரப்படுவதில்லை. அனேகமாக வாங்கப் படுகின்றன். அதற்குள் படுகின்ற பாடுகள் அப்பப்பா அப்பப்பா.

Friday, April 13, 2012

அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள் அன்புடன் நெல்லைக்கண்ணன்


இன்று காலை 18-04-2012 குமுதம் வார இதழைப் பார்த்துக் கொண்டிருந்தேன். 94ம் பக்கத்தில் திரைப்படப் பாடலாசிரியர் தம்பி நா.முத்துக்குமார் அவர்களின் கவிதைகள் வெளியாகியிருந்தன.
முதல் கவிதையைப் பார்த்தவுடனேயே அதிர்ந்து போனேன்.

எனது காதல் செய்யாதவர்கள் கல்லெறியுங்கள் கவிதைத் தொகுப்பின் முதல் கவிதையை மாற்றி எழுதியிருக்கின்றார்.

எனது கவிதை

நீ
கோலம்
போட
வருவதைப்
பார்க்கவே
சூரியன்
வருகின்றான்

இவர்கள்
அதைக்
காலை
என்கின்றார்கள்

இன்னொரு
முறை
பார்த்தால் தான்
மறைவேன்
என்கின்றான்

அதை
மாலை
என்கின்றார்கள்


நா.முத்துக்குமார் இதனை மிகச் சாமர்த்தியமாக எழுதியிருக்கின்றார்.

உன்னைப் பார்க்க
சூரியன் வருவதை
காலை என்கின்றோம்

உன்னைப் பார்த்துச்
சூரியன் விழுவதை
மாலை என்கின்றோம்