Monday, May 7, 2012

மதுரை ஆதீனத்தின் ஒழுங்கீனமான செயல்.
அருணகிரியாரின் முதற் பாதிதான்  ஆதீனகர்த்தரே. புரியும்  என்று கருதுகின்றேன். ஆமாம் பெண் பித்தனாக அலைந்து நோய் வாய்ப்பட்டு திருவண்ணாமலை கோபுரத்தில் இருந்து குதித்த பின்னரே முருகப் பெருமான் அருள் பெற்றவர். அருணகிரிநாதர். அதனாலேதான்  முதற் பாதி என்றேன்.திருஞான சம்பந்தர் உமையம்மையின் பாலருந்தி தோடுடைய செவியன் என்று  அருளினால் பாடியவர். அவர் தனது உரையையெல்லாம் இறைவனின்  உரையாகக் கருதியவர். எனதுரை தனதுரையாக என்று திருவாய் மலர்ந்தருளினார்.அவரின் திருமடத்தில் காமப்பாலின் பிரதிநிதியாகிய நித்யானந்தனை நியமித்திருக்கின்ரார். ஒழுங்கீனமான செயல் என்பது இலைய சந்நிதானம் என்று மதுரையில் இருந்து அறிவிக்க முடியவில்லை. பட்டாபிஷேகத்தையும் மதுரையில் வைத்து நடத்த இயலவில்லை.நித்யானந்தனின் அடிமையாக அவன் கட்டுப்பாட்டில் இருக்கின்றார் அருணகிரி.

தருமபுரம் திருப்பனந்தாள் திருவாவடுதுறை ஆதீனங்களின் முன்னால் எல்லாம்  நித்யானந்தனின் பிடதி ஆசிரமத் தொண்டர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்துவார்களாம். அப்படியென்றால் திருஞானசம்பந்தரின் திருமடத்தின் இளைய பட்டம் தந்தாரே அருணகிரி அதை விட பிடதி  தொண்டர்
கள் முக்கியம் ஏனென்றால் அவர்கள்தானே மனோ  (ரஞ்சித) மகான்களாக இருக்க முடியும்.

சைவத் திருமடங்க்ளில் பழமை வாய்ந்த திருமடங்களை மிரட்டுகின்றான் நித்தியானந்தன். நித்தியமும் ஆனந்தமாக இருப்பதற்கே அந்தப் பெயர் சூட்டிக் கொண்டவன்.

 திருஞானசம்பந்தருக்கு அன்று மதுரையை ஆண்ட அரசி பாண்டிமாதேவி உதவி புரிந்ததைப் போன்று இன்றைய தமிழகத்தின் பேரரசியாக இருக்கின்ற
முதல்வர் அம்மா அவர்கள் உதவி நித்தியானந்தனின் கொடிய பிடியில் இருந்து திருஞானசம்பந்தரின் திருமடத்தைக் காப்பாற்றித் தமிழர்தம் பண்டையப் பெருமையைக் காப்பாற்ற வேண்டும்

அங்கயற்கண்ணி அருள் புரிவாள்.

Sunday, May 6, 2012

நா.முத்துக்குமாரின் பண்பற்ற செயல்

அன்புள்ள தமிழர்களே வாழ்க தமிழுடன் திரைப்படக் கவிஞர் தம்பி நா.முத்துக்குமார் அவர்கள் எனது கவிதையைத் தான் எடுத்துக் கொண்டிருக்கின்ரார் கருதினேன்.ஆனால் அவர் தொடர்ந்து இந்தப் பணியைத்தன் மேற்கொண்டிருக்கின்ரார் என்று வண்ணத்திரை இதழின் மூலமாகத் தெரிந்து கொண்டேன்.திரைப் படத்துறையைச் சர்ந்த ந்ண்பர்களும்
அதனையே வழி மொழிகின்றனர். என்ன செய்ய.அன்புடன் நெல்லைக்கண்ணன்

Thursday, May 3, 2012