Friday, August 31, 2012

குழந்தைகளை வாழ விடுங்கள்


பள்ளிக் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ளுகின்றனர்.காரணம் ஆசிரியர்களின் கடும்  நடவடிக்கைகள். பள்ளியின் அடக்குமுறை நடவடிக்கைகள்.

காரணம் யார்.நெல்லை மொழியிலே சொன்னால் சீமையில இல்லாத் படிப்பு.
ஆயிரக் கணக்கிலே செலவழித்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர். வெளிநாடுகளுக்கு சேவை செய்ய இங்கே அவர்களைத் தயார் செய்கின்றனர்.

பிள்ளைகள் உறங்க வேண்டிய வயதிலே உறங்க அனுமதிக்கப் படுகின்றனரா.
நன்கு உணவருந்துகின்றார்களா. நல்ல உணவருந்துகின்றார்களா. ஒடியாடி
விளையாடுகின்றனரா. அவர்கள் வயதுக்குரிய கல்வியைக் கற்கின்றார்களா.

காலையிலே ஐந்து மணிக்கு எழுப்பப் பட்டு ஏழு மணிக்கு பள்ளி வாகனங்களுக்காக தூங்கு மூஞ்சியாய் காத்து நிற்கின்ற குழந்தைகளைப் பார்க்கையில் இந்தப் பெற்றோர்களை என்ன செய்யலாம் என்று தோன்றுகின்றது.

எப்படியாவது மதிப்பெண் பெற வேண்டும் என்பது பெற்றோர்களின் ஆசை.
ஆயிரக் கணக்கில் வாங்கிய பள்ளி நிர்வாகம் ஆசிரியர்களுக்குக் கட்டளை
யிடுகின்றது. எப்படியாவது படிக்க வையுங்கள் என்று. கண்டிப்பு என்கின்ற
பெயரில் மனித உரிமை மீறல்கள். தற்கொலைகள் தொடரத் தானே செய்யும்.

விடுமுறை என்பது குழந்தைகள் மனிதர்களைப் பார்க்க பறவைகளைப் பார்க்க
நீர் நிலைகளை அருவியைக் கடலை குளத்தை ஏரியைப் பார்க்க ஆறுகளைப்
பார்க்க. அனுமதி உண்டா.

விடுமுறை தினங்கள் அடுத்த வகுப்பிற்கு தயார் செய்யப் படுகின்றனர்.
உங்களுக்கு எல்லாச் சாபங்களையும் நான் தருகின்றேன்.

மதிப்புக்குரியவனாகவோ மதிப்புக்குரியவளாகவோ பிள்ளைகள் வளர
வேண்டும் என எந்தப் பெற்றோர் கருதுகின்றனர்.

மனிதப் பண்புகளோடு வளர வேண்டும் என எத்தனைப் பெற்றோர் கருதுகின்றனர். அடக்குமுறை   ஆசை வெறி மண்டையில் எல்லாவற்றை
யும் திணித்து விடச் செய்யும் கொலை வெறி.

பெற்றோர்கள் ஆசிரியர்கள் பள்ளி நிர்வாகிகள் அரசு அனைவரும் குழந்தைகளின் கொடிய சாபத்திற்காளாகின்றீர்கள்.

கொடுமையான வழி முறைகளிலே கற்பிக்கப் பட்டு பல்லாயிரக் கண்க்கிலே சம்பாதித்து திருமணம் செய்தால் வாழ்கின்றார்க்ளா சிலரைத் த்விர.

குழந்தைகள் உங்களுக்குப் பிறந்த தனாலேயே அவர்களைக் கொடுமைப் படுத்துகின்றீர்களே.

அவர்களை மனிதர்கள் என்று உணருங்கள்.

அதை உணராததனால்தான் மொத்தமாகவே இழந்து விடுகின்றீர்கள்.
பள்ளிகளை ஆசிரியர்களைக் குறை சொல்லாதீர்கள்.

மாநகராட்சிப் பள்ளிகளிலே படிக்கின்ற குழந்தைகளில் பலர் மிகப் பெரிய
வெற்றியினைப் பெறுகின்றனர். பெரிய பொறுப்புக்ளுக்கு வருகின்றனர்.

குழந்தைகளாக வாழ விடுங்கள். கொல்லாதீர்கள்.

Monday, August 27, 2012

பெண்கள் முடிவெடுப்பார்களா

எங்கு பார்க்கினும் ஊழல் பேச்சுக்கள். சுரங்கம் கிரானைட்.தொலை பேசித் துறை. நிலக்கரி என்று.

கணவனின் மீது விழுந்து விட்ட பழியைத் துடைப்பதற்காக ஒரு அரசனை உயிர் துறக்கச் செய்தாள் கண்ணகி.

இன்று நமது பெண்களில் எத்தனை பேர் வருமானத்திற்கு அதிகமாக ஊதியத்திற்கு அதிகமாக தனது வாழ்க்கைத் துணை பணமோ பொருளோ கொண்டு வரும் போது இது ஏது. எப்படி உங்களிடம் இத்தனைப் பணம் வந்தது என்று கேள்வி எழுப்புகின்றனரா.. இது எத்தனைப் பேருடைய வயிற்றெரிச்ச்லைக் கொட்டிக் கொண்டு வந்திருக்கும். எத்தனை பேரின் உழைப்பு வஞகமாகக் கொள்ளையிடப் பட்டிருக்கும். இதனை நான் வாங்கி இந்தக் குடும்பத்திற்கு செலவழிப்பேன் என்றால் அது என் குழந்தைகளையும் அவர்கள் எதிர்காலத்தையும் பாதிக்கும். நீங்கள் பிடி படுகின்ற போது நானும் என் குழந்தைகளும் எந்த முகத்தோடு இந்த மக்கள் மத்தியில் நடப்போம் என்று கேட்கின்றனர்.

இந்தப் பணத்தை நான் வாங்கி ஆடம்பர வாழ்க்கை நடத்தினால் வயிற்றுப் பாட்டிற்காகவும் பெருந்தனவந்தர்களால் விபச்சாரத்தில் தள்ளப் பட்ட பெண்களைப் போல் அல்ல விரும்பியே விபச்சாரத்தால் ஈடுபடும் பெண்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் என்று ஆடவர்களைக் கேட்டு அவர்களோடு வாழ மறுத்தார்கள் என்றால் ஊழல் வெல்லுமா.

வாழ்க்கைத் துணை நலம் என்று வள்ளுவன் போற்றிய பெண்கள் முடிவெடுப்பார்களா?

Thursday, August 16, 2012

காந்தியும்

ஏற்றினர்
கொடிகள்

இனிப்புகள்
வழங்கினர்

காந்தியை
நினைத்து
கண்களும்
கலங்கினர்

காந்தியும்
கலங்கினார்
மேலேயிருந்து



மழை

மரங்கள்
வெட்டி
மலைகள்
அழித்து


மழைக்காய்
நடக்குது
வருண
ஜெபங்கள்

Wednesday, August 15, 2012

விடுதலை பெற்றோம்

   கைக் குழந்தைகளோடு
   பிச்சை
   எடுத்தவர்கள்
   கைது

   காந்தி
   ராட்டினத்தோடு
   எடுப்பவர்கள்



  நமது
  சுதந்திரத்தை
  உறுதி
  செய்தார்
  பிரதமர்
 
  கண்ணாடிக்
  கூண்டுக்குள்
  நின்று



 காந்தி சமாதியில்
 மலர்

நாடெங்கும்
மதுக்
கடைகள்


Monday, August 13, 2012

எப்போது

தமிழ் நாடு அரசுத் தேர்வாணையத் தேர்வில் வினாத் தாளோடும் விடைத் தாளோடும் ஒரு பெண்தேர்வு எழுத வந்துள்ளார். மீண்டும் படித்தவர்களின் ஈனத் தனம் தானே அதில் நமக்கு புலப் படுகின்றது.

இப்படி வாழ்ந்தால்தான் மனிதப் பிறப்பு என்று உணர்த்திய வள்ளுவரும் நாலடியாரும் இளங்கோவும் கம்பனும் பிறந்த தமிழர் நாட்டில் என்ன கொடுமை.

மலைகளில் தீ பற்றிக் கொண்டேயிருக்கின்றது. ஏழைத் தொழிலாளிகள் தான்
தீ வைக்கின்றனர் என்று அதிகாரிகள் சொல்லுகின்றனர். அதன் பின்னர் ஒரு அரசியல்வாதியோ அல்லது ஒரு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவரோ இருக்கின்றார் என்பதனை ஊர் அறிந்திருக்கின்றது. சொல்ல முடியாது.
தவறு செய்கின்றவர்களைக் குறித்து காவல் நிலையத்தில் சொன்னால் காவல் நிலையமே அவர்களுக்குத் தகவல் சொல்லி புகார் கொடுத்தவரைக் கவனிக்கச் சொல்லுகின்ற நாட்டில் எங்கே குற்றவாளிகள் தண்டிக்கப் படுவார்கள்.

பிச்சைக் காரர்களிடமே காவலர்கள் கையூட்டு வாங்குவதாக வடிவேல் ஒரு படத்தில் நடிப்பார். நான் கூட மனம் நொந்தேன். ஆனால் அது நெல்லையிலே நடந்த போது  வெட்கித் தலை குனிந்தேன்.

எத்தனை தவறுகள் நடப்பினும் குற்றங்கள் நடப்பினும் நல்லவர்கள் தான் பெரும்பான்மையாக நமது நாட்டில் உள்ளார்கள். அவர்கள் செய்யும் ஒரே தவறு எதையும் கண்டு கொள்ளாமல் வாழ்ந்து விட்டுப் போய் விட வேண்டும் என நினைப்பதுதான்.

90 சதவீதம் மக்கள் நல்லவர்களாக கடவுளுக்கும் மனச் சாட்சிக்கும் பயந்தவர்களாக இருக்கின்றார்களெ ஒழிய் எதையும் எதிர்த்து போராடும் மனம் பெற்றவர்களாக வாழ்ந்து விட்டுப் போய் விடுகின்றார்களே

கொடுமை கண்டு பொங்குவாய் வா வா வா என்றான் பாரதி.
எப்போது பொங்கப் போகின்றோம்


Sunday, August 12, 2012

முடிவெடுக்க வேண்டும்

கிரானைட் குவாரிகளின் கொள்ளையைக் கண்டு பிடித்தனாலேயே சகாயம் மாற்றப் பட்டிருக்கின்றார் என்று நாங்கள் சொன்னோம். இன்று அது வெளிச்சமாகியுள்ளது. இதை மாவட்ட ஆட்சித் தலைவர் தான் கண்டு பிடித்திருக்கின்றார். எதிர்க்கட்சி ஒன்றும் சொல்லி விடவில்லை. ஏனெனில்
அவர்களுக்குத் தெரியும்.அவர்களுக்கு நெருக்கமாக இருந்த திரைப் படப் பாடலாசிரியரின் நெருங்கிய ந்ண்பர்தான் முதல்வர் இதில். இவர்கள் ஒத்தக்கடை ஆனைமலையை உடைத்து விற்று விட முனைந்தார்கள். இத்தனை பெரிய கொள்ளையை தெரியாமலா இருந்தார்கள் ந்மது அரசு அதிகாரிகள். அவர்களின் உதவியின்றி இது எப்படி ந்டந்திருக்கும். பசிக்குத் திருடுகின்ற ஏழைகளை உடனே கைது செய்து உள்ளே வைத்த இந்த அதிகாரிகள் இதனை எப்படிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பணம் பணம் எப்படியாவது பணம் சேர்த்து விட வேண்டும். தலைவர்கள் காட்டுகின்ற வழி அதிகாரிகளிடமும் பொது மக்களிடமும் ஆசையைத் தூண்டி விட்டது. எப்படித் தப்பாகச் சம்பாதித்தாலும் கைது வழக்கு என்று அது நீடிக்கும். பிறகு மக்கள் மறந்து போவார்கள். அந்த சம்பாத்தியத்தோடு இந்த நாட்டிலேயே வாழலாம் கோயிலில் முதல் மரியாதையொடும் சமூகத்தில் அந்தஸ்தோடும்.

அறம் ஈனும் இன்பமும் ஈனும் திறனோடு
தீதின்றி வந்த பொருள்.

இது திருக்குறள் என்பதைக் கூட யாரும் மறந்திருக்க மாட்டார்கள் என்று நம்புகின்றேன்.

வள்ளுவருக்குச் சிலைகள் கோட்டம். மேடைகள் தோறும் குறட்பாக்கள்.
இதனை விட வள்ளுவரை எந்த வழியில் அவமானப் படுத்தி விட முடியும்.

இந்தக் கொள்ளையருக்கு இந்த ஆட்சியிலும் ஆட்கள் உண்டு. என்ன செய்ய.

இன்றைக்குப் போய் சோதனைகள் போடும் இந்த அதிகாரிகள் பலர் இதற்குக் காரணம் இவர்களை என்ன் செய்யப் போகின்றது அரசுகள்.

நல்லவராக இருந்தால் சகாயம் மாற்றப் படுகின்றார்.

அதுல் மிஸ்ரா நல்ல வேளை இவரும் ச்காயம் போன்றவரே.

இவர் மதுரை ஆட்சித் தலைவராக வந்த உடனே சிவபெருமானின் அவதாரம் என்று தன்னைச் சொல்லிக் கொள்கின்ற நித்தியானந்தன் இவர் எனது ப்க்தர்
திருவண்ணாமலையில் பல முறை எனது ஆசிரமத்தில் வந்து ஆசி வாங்கிச் செல்வார் என்ற உடனேயே உடனடியாக அதுல் மிஸ்ரா அதனை ம்றுத்தார். ஆனால் ஒரு மாவட்ட ஆட்சித் தலைவரான் தன்னைப் பற்றியே பொய் சொன்ன அந்த நித்தியானந்தாவின் மீது ந்டவடிக்கை எடுத்து தன் பக்க்த்தைக் காப்பாற்றியிருக்க வேண்டும்  ஏன் செய்ய வில்லை புரியவில்லை.
கர்நாடக உயர் நீதி மன்றத்தில் நித்தியானந்தாவிற்காக ஒய்வு பெற்ற உயர் நீதி மன்ற் நீதிபதியே வழக்காடுகின்றார். நீதி உயிர் வாழுமா.

ஒய்வு பெற்ற நீதிபதிகள் வழக்குரைக்க வந்தால் நீதி என்னாகும். அரசுகள் இதைத் தடுக்காதா.

ம்துரை ஆதீனகர்த்தர் உயிர் ஆபத்தில் இருக்கின்றார் என்பதனை பல முறை சொல்லியும் அரசு நடவ்டிக்கை எடுக்க மறுக்கின்றதே என்ன காரணம்
யாருக்குப் புரிகின்றது.

சொக்கநாதரும் அங்கயற்கண்ணி அம்மையும் தான் இதற்கு முடிவெடுக்க வேண்டும்.

Saturday, August 11, 2012

கடவுளையே நம்புவோம்

பேரூந்து ஒட்டையில் குழந்தை ஒருத்தி விழுந்து சீயோன் பள்ளி தாளாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் அதற்கு வருத்தம் கொள்ளுகின்றார்.
ஆனால் அவரது மகனின் மரணத்திற்காக அவர் படித்த கல்விக் கூடத்தின் மீது அவர் வழக்குப் போட்டிருக்கின்றார்.

எல்லாப் பள்ளிப் பேருந்துகளையும் உடனே அதிகாரிகள் சோதனையிடத் தொடங்கி விட்டார்கள். அவர்களை எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை. ஏற்கனவெ இவர்கள் பரிசோதித்து அனுமதி வழங்கிய பேரூந்துகள் அவை என்பதனைக் கூட மக்கள் ம்றந்திருப்பார்கள் என்கின்ற ஈனத்தனம்.

எல்லா ஊடகங்களும் இன்னும் ஒரிரு நாள் இது குறித்து எழுதக் கூடும். அதன்பின்னர் அவர்களுக்கு வேறு பணிகள் வந்து விடும். இதுவும் கும்பகோணம் தீ விபத்தைப் போல கிடப்பில் போடப் படும்.இன்று உச்சநீதி மன்றம் உத்தரவிடுகின்றது 6 மாத காலத்திற்குள் கும்பகோணம் தீ விபத்து வழக்கில் தீர்ப்பு வழங்கச் சொல்லி.

இதே தான் இந்தப் பேருந்து வழக்கிலும் ந்டை பெறப் போகின்றது.

படித்தவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான் போவான் அய்யோன்னு போவான் என்று பாரதி சொன்னான்.

எந்த அதிகாரியோ அரசு ஊழியரோ தவறு செய்தால் கேட்க முடியாது. உடனே அவர் எங்கள் ஜாதி அவர் மீது பழி போட அனுமதிக்க மாட்டோம் என்று ஒரு கூக்குரல் சுவரொட்டிகள். எங்கள் ஜாதியில் இப்படி ஒரு மக்கள் விரோதி இருப்பதனை அனுமதியோம் என்று யாரேனும் போராட முன் வருகின்றார்களா அன்றுதான் இதற்கு முடிவு வரும். யார் முடிவு கட்டுவது கடவுளையே ந்ம்புவோம்.

அப்துல் கலாம் அவர்கள் இந்த முறையும் எல்லோரும் சொன்னால் நான் குடியரசுத் தலைவர் ஆவேன் என்று விரும்பியது எப்படிச் சரி.

அரசியல் ஊழலை ஒழிக்கப் புறப்பட்ட அன்னா ஹசாரே அரசியல் கட்சி துவக்குகின்றார்.

புரிகின்றது. பதவி ஆசைகள் எல்லோரையும் படுத்துகின்றது. பதவியை துச்சமெனத் தூக்கி எறிந்து விட்டு வள்ளலார் திருமடத்திற்கு தனது சொத்துக்கள் அனைத்தையும் எழுதி விட்டு அரசியல் பக்கமே திரும்பாது வாழ்ந்து மறைந்த பெரியவர் ஒமந்தூரார் நினைவிலேயே உள்ளார்.