Saturday, September 29, 2012

இன்று இருதய தினமாம்

இன்று இருதய தினமாம்.இன்று மட்டுமாவது இருதயத்தோடு வாழ வேண்டுகின்றார்கள் போல.

இருதயம் நன்றாக இருக்க வழிமுறைகள் சொல்லுகின்றனர்.சிகரெட் பிடிக்காதே.உப்பு சீனியை(சர்க்கரையை) குறைவாக ப்யன்படுத்து. முடிந்தால் பயன் படுத்தாதே. கொழுப்பு உணவு வகைகளை விட்டு விடு. மாடிப் படிகளை ஏறிக் கட. விரைவு உணவகங்களில் சாப்பிடாதே. பல வழி காட்டுதல்கள்.

நல்லதை நினை நல்லதைச் செய் தவறான வழியில் பொருளீட்டாதே.
அடுத்தவர் வாய்ப்புகளை பறிக்காதே.பொறாமை கொள்ளாதே. வாய்ப்புகளை தவறுக்கு பயன் படுத்தாதே. ஆமாம் சட்டப் பேரவை நாடாளுமன்ற உறுப்பினரானால் மக்களுக்குச் சேவை செய். அந்தப் பதவிகளை வைத்து நீத்யற்ற மூறையில் போருளீட்டாதே.கல்வி கற்றதன் பயனாகக் கிடைத்த அரசு வேலை வாய்ப்பில் ஊதியத்திற்கு மேல் பொருளிட்டாதே. பேருந்திற்கு மட்டும் காசு வைத்துக் கொண்டு அரசு அலுவலகங்களை நம்பி வரும் ஏழைகளை அலைய விடாதே. கல்வி நிலையங்களை கொள்ளையடிப்பதற்காக நிறுவாதே. காந்தி காமராஜர் படேல் சாஸ்திரி கக்கன் லூர்தம்மாள் சைமன்  வினோபா பாவே என்ற மனிதர்களைப் போல் மனிதனாக வாழ். குறளை பேசவும் எழுதவும் மட்டும் பயன் படுத்தாதே.
உன் குடும்பம் என்பது மனித குலத்தின் உதவியின்றி வாழ முடியாது என்று உணர். அதை விட்டு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் அது அரசியல் பணியாக இருந்தாலும் அரசுப் பணியாக இருந்தாலும் கையூட்டு வாங்காதே.
இப்படியெல்லாம் இருந்தால் மட்டுமே போதும் உனது இதயம் நோயற்றது.
இவைதான் நோய்க்குக் காரணங்கள்.

வள்ளுவர் சொல்லுகின்றார். தந்நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்த பின் தன்நெஞ்சே தன்னைச் சுடும் என்கின்றார். குற்ற உணர்வு உன்னை நோய்க்
காளாக்கிக் கொன்று விடும்.

ஈன்றாள் பசி காண்பாயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை என்கின்றார்.

நேர்மையாக இருந்தாலே இதய நோய் வராது. நன்றாகச் சாப்பிடலாம்.

மன்மோகன் சிங்கிற்கும் சோனியா அம்மையாருக்கும் இதயம் இருந்திருந்தால் வாணிகம் செய்ய வந்து தான் கிழக்கிந்தியக் கம்பெனி நமது நாட்டை அடிமை செய்து விட்டது என்ற வரலாறு நினைவிற்கு வரும்.
அதற்காகத்தான் சுதேச எண்ணம் மேலோங்கச் செய்தார் காந்தி அடிகள் வெளி நாட்டுத் துணிகளை எரித்தார் வ.உ.சி.

மன்மோகன் சிங் அரசு அதிகாரியாக் இருந்தவர். நான் இது வரை கொண்டிருந்த கருத்திற்கு மாறாக சோனியா காந்தி அவர்கள் ஒரு வெளி நாட்டுக்காரர்.

பி.எல்.480 மூலம் கோதுமை தருவதாக அமெரிக்கா சொன்ன போது அதை அன்றைய மத்திய அரசு(காங்கிரஸ்) ஏற்றுக் கோண்ட போது அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராக இருந்து கொண்டே அதனை சென்னைக் கடற்கரை போதுக் கூட்டத்தில் எதிர்த்துக் குரல் கொடுத்தவர் பெருந்தலைவர் காமராஜர்.

இங்கே யாரும் வரலாறு குறித்துச் சிந்திப்பதில்லை. ந்மது தலைவர்களுக்கு இதயமே இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பது மருத்துவ உலகத்திற்கே புரியாத பெருஞ்சாவாலாக உள்ளது.
என்று உணர்கின்றேன்.

Thursday, September 27, 2012

நன்றி

நன்றி நண்பர்களே

கவுதம் இளங்குருத்தை வெற்றி பெறச் செய்யுங்கள்

விஜய் தொலைக் காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.

ஒரு தமிழ்ச் சிறுவன் தாழ்த்தப் பட்ட இனத்தைச் சேர்ந்தவன் கவுதம் இறுதிச் சுற்றிற்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளான்.

அதிலும் நீதியில்லை. போட்டியாளர்கள் நால்வரும் பாடி முடித்த பின்னர்தானே மதிப்பெண்கள் அடிப்படையில் யார் முதல் யார் இரண்டாவது யார் மூன்றாவது என்று தேர்ந்தெடுக்கப் பட வேண்டும்.

இரண்டு பேர் பாடி முடித்தவுடனே மலையாளத்து பெரிய ஜாதிப் பெண் சுகன்யா 104 மதிப்பெண்ணோடு முதல் மதிப்பெண் என்று அறிவிக்கப் பட்டாள்.
கவுதமும் யாழினியும் பாடும் முன்னரே எப்படி அவர்கள் இதை விடக் குறைந்த மதிப்பெண் தான் எடுப்பார்கள் என்று கருதினர்.

அடுத்து யாழினி என்ற பெண் சிறப்பாகப் பாடியும் அவளுக்கு மதிப்பெண் வழங்குவதிலே அநீதி இழைக்கப் பட்டது.

அதன் பின்னர் ப்ரக்தியும் கவுதமும் பாடிய பின்னர் கவுதத்திற்கு சொர்க்கம் மதுவிலே என்ற பாடலுக்கு 10 மதிப்பெண்களைத் தந்த மால்குடி சுபா அவன் மிக அருமையாகப் பாடிய சின்ன் சின்ன் ரோஜாவே என்ற பாடலுக்கு வெறும் 7 மதிப்பெண்களே தந்தார். இறுதியாகப் பாடிய இளையராஜாவின் மிகச் சிறந்த
நந்தா என்ற படத்தின் ஒராயிரம் என்ற பாடலை மிக மிகச் சிறப்பாகப் பாடியும்
அவனை சீனிவாஸ் வேறு பாடல் பாடியிருக்க வேண்டும் என்றார். மனோ என்கின்ற அந்த இஸ்லாமிய நண்பருக்கு அந்த தாழ்த்தப் பட்ட சிறுவன் மேல் என்ன வெறுப்பு. புரியவில்லை. மால்குடி சுபா அது போராட்டப் பாடலே அல்ல என்கின்றார்படத்தையும் பாடலையும் புரிந்து கொள்ளாம்லே. கொடுமை. எப்படி ஒரு தாழ்த்தப் பட்ட சிறுவனை ப்ரகதி என்ற அமெரிக்க்க் குடிமகள் மேல் ஜாதிப் பெண்ணிற்கு மேல்  விடுவதுஎன்கின்ற வெறுப்பு. திட்டமிட்டு8
மதிப்பெண் என்றார். மிக மிக பெரிய பணம் படைத்த பெண்ணிற்காக கவுதமிற்கு மதிப்பெண்களை குறைத்து ஒரு மதிப்பெண்ணிலே ப்ரகதி என்கின்ற பெண்ணை இரண்டாமிடத்திற்குக் கொண்டு வந்தனர்.

இன்னொரு கொடுமை அந்தப் பெண் ப்ரகதி தனக்கு வழங்கப் பட்ட நகைகளை
கவுதமிற்கும் யாழினிக்கும் வழங்கி அவர்களின் மேல் தட்டு உணர்வை மிகச்
சாமர்த்தியமாக வெளிப் படுத்தினர். ஏன் கவுதமின் பெற்றோரும் யாழினியின் பெற்றோரும் இதற்கு இத்தனை ஏமாளித்தனமாக ஒத்துக் கொண்டனர்.

போட்டியில் இருக்கும் போது இன்னொரு போட்டியாளர் தருகின்றார் என்பதெல்லாம் பச்சைப் பொய்.மறைமுகமாக கறுப்பர் இன ஏழைக் குழந்தைகளை கேவலப் படுத்திய செயல்.

இதுவரை நான் எனதருமை தமிழர்களே உங்களிடம் ஏதும் கேட்டதில்லை. தமிழினத்தின் ஒரே சிறுவனாக போட்டியில் நிற்கின்ற கவுதமிற்கு எஸ்/எம்.எஸ். மூலம் வாக்குகளை அள்ளித் தாருங்கள். சூழ்ச்சிக் களத்தில்
வெள்ளை மனத்தவராக நிற்கும் கவுதமையும் அவனது பெற்றோர்களையும்
பாருங்கள். தன் திறமையைத் தவிர வேறு எந்த சிபாரிசிற்கும் வழியில்லாத
அந்த இளங்குருத்தை வெற்றி பெறச் செய்யுங்கள்.

சிந்திக்க வேண்டும்

சிவகாசி வெடி விபத்தில் வறுமையில் வாடிய ஏழைகள் வெடித்துச் சிதறியதில் பதைபதைத்துப் போனோம்.

நேற்று 22 அதிகாரிகளுக்கு அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

துறை அளவிலான விசாரணையா என்ன என்று தெரியவில்லை. நமது
வேண்டுகோள் அவர்கள் மீது கொலைக் குற்ற வழக்குப் பதிவு செய்து கிரிமினல் குற்றவாளிகளாக விசாரிக்க வேண்டும். ஏனெனில் வெடித் தொழிற் சாலைகள் எத்தனை ஆபத்தானவை அதற்கு அனுமதி அளிப்பதற்கு பின் பற்ற வேண்டிய நடைமுறைகள் எதையும் பின் பற்றாமல்  சில பல ஆயிரங்களுக்
காகவோ இல்லை பெரிய தொலைக் காட்சிப் பெட்டிகளுக்காகவோ இல்லை வேறு பொருட்களுக்காகவோ இந்தக் கொடுமை நிகழ்ந்திருக்கின்றது.

அப்படி இருக்கையில் இவர்களை எப்படி விட்டு விடுவது. இன்னொன்றும் கூட
செய்வது நலம் பயக்கும். இவர்கள் ஊதியம் மற்றவற்றைக் கணக்கெடுத்து        
அளவிற்கதிகமாக அவர்களிடம் பணமோ சொத்தோ இருக்குமெனில் அதனை இந்தக் கொடியவர்களின் ஆசையால் தங்கள் உயிரை இழந்த அந்த ஏழைக் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.

எல்லாத் துறைகளிலும் துறை அளவிலான விசாரணையாக இல்லாமல் முழுமையாக பணியில் சேர்ந்ததிலிருந்து ஒவ்வொருவரும்  ஆண்டு தோறும் தங்களது சொத்துக் கணக்கினைத் தெரிவிக்க  ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

அத்தனைக்கும் மேலாக நான் ஏற்கனவே எழுதியது போல அவர்களது இல்லத்
துணைவிகள் இது எத்தனை பெரிய கேவலம் என்பதனை உணர்ந்து இதனால் எத்தனை குடும்பங்கள் பாதிக்கப் படுகின்றன் என்பதனை உணர்ந்து தங்கள்
கணவன்மார்களின் தவறான வருவாய் முயற்சிகளைத் த்டுக்க வேண்டும்.

வெடித்துச் சிதறிய பெரியவர்கள் இளைஞர்கள் குமரிகள் குழந்தைகள் அவர்களின் ஆன்மா இவர்களை மன்னிக்குமா. இவர்கள் குழந்தைகள் நோய்களுக்கு ஆளாக மாட்டார்களா. சிந்திக்க வேண்டும்

Wednesday, September 26, 2012

மரண தண்டனை

ஆறுகளில் மணல் அள்ளுவது மரங்களை வெட்டுவது என்பவை யார் ஆண்டாலும் நிற்பதில்லை. காரணம் ஆட்சிப் பொறுப்பிற்கு யார் வந்தாலும் இதனைத் தொடர்ந்து செய்வதற்கென்றே சில குடும்பத்தினர் திராவிட இயக்கங்கள் இரண்டிலும் இருந்து கொள்ளுகின்றனர். எந்த ஆட்சி என்றாலும் பிரசிசினை இல்லையல்லவா.

ஆனால்  இவர்கள் முதுகலைப் பட்டங்கள் வேறு(படிக்கவில்லை) வாங்கியிருக்கின்றனர். முறையான கல்வி என்றால் தாம் செய்வது எதிர்கால சந்ததியினருக்குச் செய்கின்ற மிகப் பெரிய கேடு என்று உணர்ந்திருப்பார்களே.அவர்கள் குழந்தைகளும் தானே இந்த மண்ணில் வாழப்
போகின்றனர்.

அவர்களுக்குக் கோடிக் கணக்கில் பணம் சம்பாதிக்கத்தானே இந்தக் கொள்ளை
கள். அந்தப் பணம் எதிர்கால உயிர் வாழ்க்கைக்கு உதவாது என்பது முறையாகக் கல்விக்க் கூடங்கள் நடத்துபவர்களிடம் முறையான ஆசிரியர்க
ளிடம் கற்றிருந்தால் தானே இவர்கள் சிந்தனையில் வரும்.தங்கள் சந்ததியினரும் இயற்கை மழைக்கென அளித்திருக்கின்ற எல்லா வளங்களையும் அழித்தால் உயிர் துறக்க வேண்டிய பரிதாப நிலைக்கு ஆளாவர்கள் என்று உணர்வார்கள்.

களக்காடு மலையில் அடிக்கடி தீப் பிடிக்கும் இவர்கள் தான் காரணம். இதில் இன்னொரு வேடிக்கை சமூக விரோதிகளுக்குச் சாதீயப் பின்னணி.

என் சமூகத்தில் ஒருவன் தவறு செய்கின்றான் என்றால் அவனைப் பிடித்து
காவல் துறை வசம் ஒப்படைத்தால் தானே நாம் மனிதர்கள், அங்கே இன்னொரு அசிங்கம் காவற்றுரையே சாதிகளின் கூடாரமாகத் திகழ்வது
தான்.

இதில் மருத்துவர்கள் சமூக விரோதச் செயல்கள் செய்தால் கைது செய்யக்
கூடாது பொறியாளர்கள் செய்தால் கைது செய்யக் கூடாது வழக்கறிஞ்ர்கள்
தவறு செய்தால் கைது செய்யக் கூடாது. ஏன் இந்த் அட்டூழியங்கள். அப்படி
யென்றால் ஏழைகள் பாட்டாளிகள் மட்டும்தான் தவறு செய்பவர்களா.

இதில் மிகப் பெரிய கொடுமை நமது அரசியல். ஒற்றை வேட்டியொடு வாழ்ந்த தேசத் தந்தை நான்கு வேட்டிகளோடு வாழ்ந்த பெருந்தலைவர் கிழிந்த வேட்டி களோடு வாழ்ந்த கக்கன்.ஒற்றை வேட்டியை துவைத்து காய வைத்து தினம் உடுத்தி வந்த தோழர் ஜீவா.

தளி இந்தியக் கம்யூனிஸ்ட் சட்டப் பேரவை  உறுப்பினர் திராவிட இயக்கங்களைத் தண்டியவராக இருக்கின்றார்.

மருத்துவத்திற்கு வந்த பெண்ணிடம் தவறு செய்கின்ற மருத்துவர் தண்டிக்கப் பட வேண்டியவரா கிரிமினல் வழக்கறிஞராகப் பணியாற்ற வேண்டியவர் கிரிமினல் வேலைகள் செய்தால் கைது செய்ய வேண்டாமா.போடாத சாலைக்கு பணம் பெறுகின்ற பொறியாளர் கைது செய்யப் பட வேண்டாமா.
பள்ளை மாணவியிடம் தவறாக நடக்கின்ற ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்
கள் கைது செய்யப் பட வேண்டாமா.

மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்பதிலே உறுதியாக இருக்கின்ற நான் சுய லாப நோக்கோடு இயற்கை வளங்களி அழிக்கின்ற இந்த அயோக்கியர்களுக்கு மரண் தண்டனை தந்தால் நன்றாக இருக்கும்  என்று
கருதுகின்றேன். இன்றும் என்றும் மனித உயிர்கள் உடல் நலத்துடன் வாழ
இயற்கை அருளியுள்ள கொடைகளை தங்கள் பண வேட்டைக் காக அழிக்கின்ற இவர்கள் பல கோடி உயிர்களோடு விளையாடுகின்றவர்கள்.
உணர்ச்சி வசப்பட்டுக் கொலை செய்து விட்டுப் பின் உட்கார்ந்து அழுகின்றவன் மரண தண்டனைக்கு ஆளாவது பரிதாபம்.

நன்கு தெரிந்து கொண்டு இயற்கை வளங்களை அழிக்கின்ற இந்தப் பாதகர்கள் மரண தண்டனைக்குரியவர்கள்.

அணுமின் நிலைய ஆபத்தை விட இவர்கள் ஆபத்தானவர்கள். எந்தத் தலைவரும் இது குறித்துப் பேச மறந்து விட்டார்களே ஏன். மறதி ஒரு கொடிய நோய்.

வானத்தில் அமுதம் இருப்ப்தாகச் சொல்வத்னை ஒத்துக் கொள்ளாத வள்ளுவ
பேராசான்
வானத்தில் இருந்து மழையின் மூலமாக வரும் நீர்தான் உயிர்க்குலங்கள் அனைத்திற்கும் அமுதம் என்கின்றான்.

வான் நின்று உலகம் வழங்கி வருதலான்
தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று

Tuesday, September 25, 2012

புரியவில்லை

பலர் என்னிடம் நட்புக் கொள்ள வேண்டும் என்று லின்க்டு இன் என்றும் பேஸ்புக் என்றும் செய்திகள் அனுப்புகின்றனர். என்னதான் பார்ப்போமே என்று அந்த வேண்டுகோளை ஏற்று உள்ளே போனால்  அதில் நான் அவர்களோடு நட்பு பூண விரும்புவதாக செய்தி வருகின்றது. நான் எல்லோரிடமும் நட்பாகத் தானே இருக்கின்றேன். அதனால் அவற்றிற்கு பதில் தருவதில்லை.


முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் நீண்ட நாட்களாக அவரைப் பார்ப்பதற்கென்றே தலைமை அலுவ்லகத்தில் காத்துக் கிடந்த பெரியவரை அழைத்து மரியாதை செய்திருக்கின்றார். தலைமைச் செயலகத்தில் யாரோ நல்லவர் இருந்திருக்கின்றார். அதனால்தான் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாத அந்தப் பெரியவர் முதலமைச்சர் அவர்களைச் சந்திக்க முடிந்திருக்கின்றது.
அமைச்சர்கள் பார்வையில் அவர் பட்டிருந்தால் ஒரு நாளும் அவரைப் பார்த்திருக்கவே முடியாது.

இரண்டு முறை முதலமைச்சரை நேரில் சந்தித்து நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்த அனுபவத்தில் சொல்கின்றேன். அவர் மிக வெளிப்படையான
வர். குழந்தை போன்றவர்.

அவருக்கு அடுத்த நிலையில் இருக்கின்ற அமைச்சர் பெருமக்கள் நேர் எதிரானவர்கள். சிரித்துக் கொண்டேயிருக்கின்றாரே பன்னீர்செல்வம் அவர் எத்தனை ஆபத்தானவர் தெரியுமா

அம்மாவிற்காக நான் தமிழ்கம் முழுவதும் பேசியபோது அவர் தொகுதிக்கும் போனேன். அவர் என்னிடம் எப்படி நடந்து கொண்டார் என்பதனை என்னால் இன்றும் மறக்க  முடியாது.

முதலமைச்சரைச் சுற்றியிருக்கும் அமைச்சர்களிலே பலர் உண்மைத் தொண்டர்களை அவரைச் சந்திக்க முடியாமல் எப்படித் தடுக்கின்றார்கள் தெரியுமா. அதிலேயும் தோட்டத்தில் இருக்கின்ற நண்பர் பூங்குன்றன் நாம் நல்ல நோக்கில் எழுதுகின்ற கடிதங்கள் எதையும் அவரிடம் தருவதில்லை.

கிரானைட் பழனிச்சாமிக்கு ரொம்ப பின்பலமாக இருந்தவர் ஒரு திரைப் படப்
பாடலாசிரியர் அவரைக் காப்பாற்றுவது பன்னீரோ என்று சந்தேகப் படுகின்றனர் அதிமுக ரத்தத்தின் ரத்தங்கள்.

அந்தத் திரைபடப் பாடலாசிரியரிடம் திமுக தலைவர் தினசரி காலையில் பேசு
வார் என்பார்கள். அவர் திடீரென்று ஜெயா டிவி. விழாவில் கலந்து கொள்ளுகின்றார்.


Monday, September 24, 2012

தினமணி வைத்தியநாதன்

நபி பெருமானாரைப் பற்றி ஒரு அநாகரிகமான திரைப் படம் எகிப்தைச் சார்ந்த ஒரு கிறிஸ்தவர் எடுத்து அதை யு  டியுபில் போட்டிருக்கின்றார்.உலகம் முழுவதும் இருக்கின்ற   இஸ்லாமிய நண்பர்கள் போராட்டங்களில் ஈடு பட்டிருக்கின்றனர்.

அமெரிக்காவில்  சில பல தடவைகள் இந்துக் கடவுளரின் படங்களைக் காலணிகளில் போடுவது உள்ளாடைகளில் போடுவது என்று அநாகரிகங்கள் அரங்கேறின.

என்ன செய்வது மன நோயாளிகள் எல்லா இடங்களிலும் இருக்கின்றனர். சில நேரங்களில் அவர்கள் பெரிய பதவிகளில் வேறு இருந்து விடுகின்றனர்.

தினமணி ஆசிரியர் அய்யா வைத்தியநாதன் அவர்கள் ஒரு தலையங்கத்தில் எழுதியிருக்கின்றார். இஸ்லாமிய நண்பர்கள் வன்முறையில் ஈடுபடுவதாக. இன்னொரு கேள்வியயும் வைக்கின்றார். அமெரிக்க விமான நிலையங்களிலே நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களையும் நடிகர் ஷாருக்கான் அவர்களையும் அவமானப் படுத்திய போது இஸ்லாமியர்கள் ஏன் போராடவில்லை.

இன்றைக்கு தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் காப்பாற்றுகின்ற தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கின்ற தமிழ்ப் பெரும் புலவர் வைத்தியநாதன் அப்துல் கலாம் அவர்களைத்தான் அந்த விழாவிற்குத்  தலைமை தாங்க அழைத்திருந்தார்.

அவரிடம் இஸ்லாம் குறித்துக் கேட்டிருந்தால் அவர் வைத்தியநாதனுக்கு விளக்கம் அளித்திருந்திருப்பார். நபி பெருமானாரை ஒரு மன நோயாளி அவமானப் படுத்தியிருக்கின்றான். அந்த அநாகரிகமும் விமான நிலையச் ச்ம்பவங்களும் ஒன்றா.

நபி பெருமானாரை இறைத் தூதரை  பண்பாடற்ற முறையில் ஆபாசமாகச் சித்தரிப்பது எங்கே அந்த மிக மிக இழிந்த செயலை எதிர்த்துப் போராடுகின்ற இஸ்லாமிய சகோதரர்களை அப்துல் கலாமையும் ஷாருக்கானையும் அமெரிக்க விமான நிலைய அதிகாரிகள் தவறாகச் சோதனை செய்த போது ஏன் போராடவில்லை  என்று  எழுதியிருக்கின்றாரே. அது முறையா.

நான் குரான் முழுவதும் படித்திருக்கின்றேன். இறைவனை முழுமையாக நம்புகின்றவர்கள் இஸ்லாமியச் சகோதரர்கள். நாளை சந்திப்போம் என்றாலும் இன்ஷா அல்லாஹ் என்பர். அதன் பொருள் இறைவன் அனுமதித்தால் என்பது. ஆமாம் இரவே இறைவன் முடிவுகள் வேறு மாதிரி இருப்பின்.

ஏன் வைத்தியநாதன் இப்படி பண்பாடில்லாமல் பிற மதத்தவரைப் புண்படுத்தியிருக்கின்றார் என்பது புரியவில்லை.

அவரவர் தமதமறிவறி வகை வகை
அவரவர் இறையவர் என் அடி அணைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி அடைய நின்றாரே

என்றருளிச் செய்கின்றார் நம்மாழ்வார்.

தமிழைக் காக்கப் பெரும் பங்கெடுத்து உழைக்கின்ற வைத்தியநாதனுக்கு எப்படியும் ஆழ்வார்கள் பாசுரங்கள் அத்து படியாயிருக்கும். ஏன்  இந்த நம்மாழ்வார் பாசுரத்தை மறந்தார். வியப்பாக் இருக்கின்றது.

நாம் எல்லோரும் பாரதியைப் போற்றுவதை விட வைத்தியநாதன் பாரதியைப் போற்றுவதில் பெரும் பங்காற்றுகின்றார்.

அந்த மகாகவி எழுதுகின்றான் தனது கட்டுரைகளில் எதிர்காலத்தில் உலகம் முழுவதும் ஸல்லல்லாஹி அலைஹி வ்ஸ்ஸலம் என்கின்ற ந்பி பெருமானார் இறைத் தூதர் அறிமுகப் படுத்திய இஸ்லாம் மார்க்கமே  பெரிய மார்க்கமாகத் திகழும் என்று எழுதியிருக்கின்றார். பார்தியைத் தலை கீழாகப் படித்திருக்கின்ற பயின்றிருக்கின்ற வைத்தியநாதன் எப்படி இதனை மறந்தார்.

Thursday, September 20, 2012

பச்சிலை

பிள்ளையார் ஒன்றே முக்கால் ஜாண் உயரத்தில் களிமண்ணிலே செய்து வணங்கி விட்டு நீர் நிலைகளிலே கரைத்து விடுவதுதான் நமது முன்னோர்கள்
செய்த இறைவன் அருளிச் செய்த இயற்கையை பாழ்படுத்தத முறை.

இத்தனை உயரமான மாசு தரும் வண்ணப் பூச்சுகளோடு  பிள்ளையார் கிரேனிலே ஏற்றி கடலில் தூக்கி வீசப் படுகின்றார்.

பிள்ளையாருக்கு ரூபாய் நோட்டு மாலை. புரியவில்லை. எதைத் தான் இறைவனுக்குச் சார்த்துவது என்பது கூட புரியாத வழிபாடுகள்.

பிள்ளையார் மார்வாடிக் கோலத்திலே கிரிக்கெட் வீரராக அய்யோ.

திருமூலர் சொன்னார் யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை

Wednesday, September 19, 2012

பிள்ளையார் தினமணி குமுதம்

பெரியவர்களே வாழ்க தமிழுடன். இரண்டு காது மடல்களையும் நன்கு இழுத்து விட்டால் புத்திக் கூர்மையாக வேலை செய்யும் ஜெர்மன் கண்டு பிடிப்பாளர்கள் சொல்லியுள்ளார்கள். இதனைத் தான் நமது பெரியவர்கள் பிள்ளையார் முன்னர் தோப்புக் கரணம்  போடச் சொன்னார்கள்.புத்தியும்
வேலை செய்யும். கால்களுக்கும் பலம் கிடைக்கும். இது ஒரு செய்தி.


பல நண்பர்கள் என்னிடம் ஏன் தினமணியில் கட்டுரைகள் எழுதவில்லை எனக் கேட்கின்றனர். ஏன் இவர்கள் இந்த வினாவினை தினமணி ஆசிரியர் திருமிகு அய்யா வைத்தியநாதன் அவர்களிடம் கேட்கக் கூடாது.

நானாக யாரிடமும் போனதில்லை. கேட்டதுமில்லை.

எனது அன்பு மிக்க பிள்ளை நெய்வேலி பொறியாளர் வாணனும் கல்லூரி முதல்வர் மருதூராரும் துரைக்கண்ணுவும் கவிஞர் இராமசாமியும் அழைத்து நெய்வேலி புத்தகக் கண்காட்சிக்குப் போயிருந்த போது தினமணி ஆசிரியர் அய்யா வைத்தியநாதன் அவர்கள் என்னைச் சந்தித்தார். அங்கே தான் அவர் என்னிடம் தினமணியில் எழுதுங்களேன் என்றார். எழுதத் தொடங்கினேன்.நிறையவே எழுதினேன். படித்தவுடன் உடன் என்னிடம் பேசுபவர்கள் பல பேர்.

மரியாதைக்குரிய அய்யா வைத்தியநாதன் அவர்கள் என்னை அண்ணா என்றே அழைப்பார்கள். தினமணியிலேயே கலாரசிகன் என்ற பெயரில் அவர் ஞாயிற்றுக் கிழமைகளில் எழுதுகின்ற கட்டுரைகளில் எனது விருந்தோம்பலைப் பற்றியும் எனது அறிவினைப் பற்றியும் திருநெல்வேலிக்கு வந்தால் நெல்லையப்பரைக் கூடப் பார்க்காமல் வந்து விடுவேன். நெல்லைக் கண்ணன் அவர்களைப் பார்க்காமல் வர மாட்டேன் என்றெல்லாம் எழுதினார். இருட்டுக் கடை அல்வா கிடைக்கவில்லை என்றால் கவலை கொள்ள வேண்டாம் தமிழ்க்கடல் நெல்லைக் கண்ணன் அவர்கள் வீட்டில் போய் வாங்கிக் கொள்ளலாம் என்றெல்லாம் எழுதினார்.

திருநெல்வேலியில் நடந்த அவர் புத்தக விழாவிலும் என்னை பங்கு கொள்ளச் செய்தார்.

ஒரு கால கட்டத்தில் நான் எழுதிய எந்தக் கட்டுரைகளையும் வெளியிடவில்லை. நீங்கள் இனிமேல் எனக்கு எந்தக் கட்டுரையையும் அனுப்பாதீர்கள் என்றும் உணர்த்தினார் நன்றியுடன் நிறுத்திக் கொண்டேன்.

இப்போதெல்லாம் அவர் நெல்லையப்பரை மட்டுமே பார்த்துச் செல்கின்றார்.


இன்னொரு வார இதழின் ஆசிரியர். எங்கள் மாவட்டத்துக்காரர் இளைஞர் என்னிடம் அன்பு காட்டிய தலைவர் கோசல்ராம் பெயரைக் கொண்டவர். மிக அன்பானவர். குமுதத்தில் என்னை எழுத அழைப்பவர்.அவர் என்னை தொலைபேசியில் அழைப்பார். நான் அழைக்கும் போதெல்லாம் உடன் பேசுவார். இப்போதெல்லாம் நான் எத்தனை முறை அழைத்தாலும் பேசுவதில்லை. நான் ஒரு தவறும் செய்யவில்லை.

நான் மிகவும் போற்றுகின்ற இசைக் கடவுள் இளையராஜாவின் புத்தகங்களின் அறிமுக  விழா மதுரையில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடை பெற்ற பொழுது என்னைக் கட்டாயம் கலந்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தினார். கலந்து கொண்டேன்.

அந்த விழாவின் புகைப் படங்களையும் ஒளிப் பதிவு நாடாவையும் அனுப்பித் தருவேன் என்று உறுதி அளித்தார். அனுப்பவே இல்லை. அதனாலே நான் தொலைபேசியில் அழைத்தாலும் என்னிடம் பேசுவதேயில்லை. என்ன செய்ய அவர் ஒரு பெரிய வார இதழின் ஆசிரியர். நான் வெறும் நெல்லைக் கண்ணன் தானே.


Monday, September 17, 2012

பாராட்டுங்கள்

மத்திய அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே எல்லாவற்றையும் மறந்து விடுவோம் என்று சொல்கின்றார்.

என்ன திமிர்

 பாரதியின் வீட்டை சிதிலமடைய விட்டு விட்டோம்.தமிழ்த் தாத்தா உ.வே.சா. வீடு சிதிலமடைந்து வருகின்றது.
அவர்களையெல்லாம் நாம் மறந்தா விட்டோம். இல்லை.

36 குழந்தைகள் தீயிலே கும்பகோணத்திலே கருகிய போது எத்தனை பேர் எத்தனை வாக்குறுதிகள் தந்தார்கள். அங்கே போய் புகைப்படங்களிலே அழுதார்கள்.அவர்கள் எத்தனை பேர் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றினார்கள். யார் கேட்டார்கள்.

நீச்சல் குளத்தில் மாணவன் இறந்து போனான் பத்மா சேஷாத்ரி பள்ளியில். அந்தப் பள்ளியின் தாளாளர் கைது செய்யப் படவில்லையே. ஏன் என்று எத்தனை பேர் கேட்டார்கள்.

பேருந்தில் ஒட்டை இருந்த பள்ளித் தாளாளர் கைது செய்யப் பட்டாற் போல
இவரும் கைது செய்யப் படவில்லையே. ஏன்.

எங்கே துப்பாக்கிச் சூடு நடந்தாலும் நீதி விசாரணை கேட்பார்கள். அதன் பின்னர் எத்தனை பேர் அது குறித்து நினைவில் வைத்திருப்பார்கள்.

மின் கட்டண உயர்வு பேருந்து கட்டண உயர்வு என்றெல்லாம் புலம்பினார்களே. இன்று என்ன நிலைமை.

மறதி மன்னர்கள் இந்தியர்கள் என்பதனை நன்கு உணர்ந்ததனால் தானே அவர் வெற்றியும் பெற்றிருக்கின்றார். அமைச்சரும் ஆகியிருக்கின்றார்.

ஒன்றும் இல்லை. நமத் தமிழ்நாட்டில் மாறி மாறி ஏற்படும் கூட்டணிகள்.அதன் தலைவர்கள் ஒவ்வொரு நேரத்தில் பேசுகின்ற பேச்சுகள் எழுதிய எழுத்துகளையெல்லாம் நினைவிலா தலைவர்கள் வைத்திருக்கின்றார்கள். நாமும்  வைத்திருக்கின்றோம்.

அது போல மறந்து விடுவது தான் நமக்கு நல்லது.

காந்தி காமராஜர் கக்கன் சாஸ்திரி நேரு வ்ல்லபாய் அபுல் கலாம் ஆசாத் கான் அப்துல் கபார்கான். இவர்களையெல்லாம் நாம் மறந்து விடுவதில்லையா.அதனால்தானே இவர்களெல்லாம் அமைச்சர்களாகி இருக்கின்றார்கள்.

ரெட்டி சகோதரர்கள் ஊழலுக்கு துணை போன எடியுரப்பாவை ஒன்றும் செய்ய முடியாத பா.ஜ.க. இதைச் சொல்வது தான் மோசடி.

இத்தனைக் கொசுவர்த்தி சுருள்கள் விற்கின்ற இந்த நாட்டில் மத்தியிலும் மாநிலத்திலும் சுகாதரத் துறை அமைச்சர்கள் இருக்கின்றார்கள்.அவர்கள்
எல்லாவற்றையும் மறந்தவர்களாக இருப்பதினால் தானே அமைச்சர்களாக
இருக்க முடிகின்றது.

நீரா ராடியாவை நினைவு இருக்கின்றதா யாருக்காவது.

விடுங்கள். ஒரு அமைச்சர் உண்மை பேசுகின்றார். அவரைப் பராட்டுவதை விட்டு விட்டு .
 




Saturday, September 15, 2012

சோனியா மன்மோகன் சிங்

வெளி
நாட்டுப்
பொருட்கள்
வேண்டாம்
என்றார்
அந்தக்
காந்தி

வெளி
நாட்டையே
உள்ளே
கொண்டு
வருகின்றார்
சோனியா காந்தி


நாட்டிற்காக
தூக்கு மேடை
ஏறினான்
பகத்சிங்

நாட்டையே
தூக்கு மேடை
ஏற்றுகின்றார்
மன்மோகன் சிங்

விருதுகளும் பரிசுகளும்

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சிறப்பாகவே நடத்தப் படுகிறது. ஒழுங்காக முறையாக நடத்தப் படுகின்றதா என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.

போன முறையே எல்லோரும் எதிர்பார்த்த சத்ய பிரகாஷை விட்டு விட்டு யாருமே எதிர் பார்க்காத சாய் சரணைத் தேர்ந்தெடுத்தனர்.

இப்போதும் அதே போக்கில்தான் போகிறது அந்த நிகழ்ச்சி.

கவுதம் என்று ஒரு 13 வயது சிறுவன் .கர்ணன் படத்தின் உச்சக் காட்சியின் பாடலை உள்ளத்தில் நல்ல உள்ளம்  என்ற பாடலைப் பாடுகின்றான்.

உலகம் போற்றி நிற்கின்ற அருணா சாயிராம்  சுதா ரகுநாதன் பாம்பே சகோதரிகள் உண்ணி கிருஷ்ணன் பாரதியாரின் கொள்ளுப் பேரன் அனைவரும் கண்களில் நீர் மல்க அவனைப் பாராட்டினார்கள். வீணை அரக்கன் ராஜேஷ் வைத்யா அவனைத் தூக்கிக் கொஞ்சினார். கடம் மேதை விநாயகராம் மகன்  அவனைக் கட்டித் தழுவினார். வயலின் வித்வான். எத்தனையோ கச்சேரிகளுக்கு வாசித்திருக்கின்றேன். என்னை இவன் அழ வைத்து விட்டான் என்றார். டிரம்ஸ் வாசித்தவர். ஒத்திகையிலேயே இவன்  எங்களை அழ வைத்து விடுவான் என்று முடிவெடுத்து விட்டோம் என்றார்.
சுதா ரகுநாதன் அவன் க்ண்ணீரைத் துடைத்து விட்டார். உண்ணி அவனைக் கட்டித் தழுவிக்கொண்டார்.

பாம்பே சகோதரிகள் சொன்னார்கள். கவுதம் உன்னை என்ன சொல்ல. எங்களுக்கு அழுகைதான் வரது என்றார்கள். சுதா பாராட்ட முடியாமல் அவனைப் பார்த்து நீ சொத்து என்றார். வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு இதயமும் இதயமும் சந்திப்பது தான் சங்கீதம் க்வுதம் நீ இந்த 13 வயசிலே அந்த உணர்வை உன் பாடலிலே கொண்டு வந்தாய். நீ இதற்கும் மேலே என்று இறைவனின் சிறந்த படைப்பு அந்தச் சிறுவன் என்பதைச் சொன்னார். உண்ணியும் அதே கருத்தைச் சொன்னார். அவர்களாகவே எழுந்து வந்து அந்தச் சிறுவனைப் பாராட்டி மகிழ்ந்தனர்.

அதே கவுதம். பின்னர் பாடும்போது மால்குடி சுபா அவனைப் பர்த்து நீ நாட்டுப் புறப் பாடல்கள் பாடுறவன். ஆனாலும் இந்தப் பாட்டைப் பரவாயில்லை பாடிட்டே என்கின்றார். இவர் ஒன்றும் சங்கீதத்தில் சாதித்தவரில்லை. இவரும் திரைப்படங்களில் குத்துப் பாட்டுப் பாடுகின்றவர்தான்.

அவன் கிராமத்துக் காரன். அதனால் அவனுக்குச் சங்கீதம் வராது என்று கருதுகின்றார் போலும். தம்பி மனோவும் அதனை ஆதரித்துப் பேசிய போது அதிர்ந்து போனேன். அருணா அம்மையாரை விட சகோதரி சுதாவை விட பாம்பே சகோதரிகளை விட உண்ணியை விட இவர்கள் சங்கீதத்தில் பெரியவர்கள். அங்கே பிரகதி என்கின்ற அமெரிக்க் குடிமகள் நன்றாகவே பாடுகின்றார். அவர் சரியாகப் பாடாத போதும் மால்குடி அம்மா அப்படியே தேன் குடித்தால் போலப் புகழுகின்றார்.

சுகன்யா என்கின்ற பெண் மிக நன்றாகப் பாடுகின்றாள். அவளுக்கு இரண்டு முறை தங்கப் பரிசு கொடுத்தார்கள். யாழினி என்கின்ற் சின்னப் பெண் மிக நன்றாகப் பாடி முதலில் ஒரு முறை தங்கம் பரிசு பெற்றாள். இரண்டாவது ஒரு முறை நடிகர் விக்ரம் முன்னால் பாடி எல்லோருடைய பாராட்டையும் பெற்றாள். அவளுக்கு இரண்டாவது முறை தர வேண்டிய தங்கப் பரிசை பிரகதிக்குக் கொடுத்தார்கள்.

யாழினி அம்மாவைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது அவர்கள் கறுப்பர் இனம்.கவுதமும் அப்படித் தான் அதனால்தான் மால்குடி சுபா அம்மாவிற்கு அவர்களைப் பிடிக்கவில்லை.எப்படியும் பிரகதிக்கு அந்த முதல் இடத்தைத் தருவதற்கு முயற்சி நடக்கிறாற் போல் தெரிகின்றது.சுகன்யாவிற்குத் தர முடியாது.அவர் மலையாள நாட்டைச் சார்ந்தவர் போல.வைகோ அண்ணன் நெடுமாறன் போன்றவர்கள் கோபப் படக் கூடும்.

அவர்கள் பரிசு அவர்கள் தருகின்றார்கள். நாம் என்ன கேட்க முடியும்.இதில் இன்னொரு கொடுமை இந்த நிகழ்ச்சியை  இயக்குபவர்களைக் கேட்டால் சங்கீதத்திற்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இருக்காது.

என் அனுபவம் அதுவேதான்.

வழங்கப் படுகின்ற விருதுகள் போய் வாங்கப் படுகின்ற விருதுகள் ஆகி விட்ட நாட்டில் இதற்கு வருத்தப் பட்டு என்ன செய்ய.

திருநெல்வேலி மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதிற்கு மாவட்டக் கல்வி அலுவலகம் தேர்ந்து அனுப்பிய பெயர்கள் வேறு. அறிவிக்கப் பட்ட பெயர்கள் வேறு. என்ன செய்ய. எல்லாவற்றிலும்  சாதி மதம்.

Friday, September 14, 2012

ஒன்றும் புரியவில்லை

அணு மின் நிலையத்தை எதிர்த்து நடை பெறும் போராட்டங்களை ஆதரித்து கிறிஸ்தவத் தந்தைகளும் போராட்டத்தில் ஈடுபடுவது ஏன் என புரியவில்லை. உலக முழுவதும் இருக்கின்ற அணு உலைகளை எதிர்த்து அந்த அந்த நாடுகளில் இருக்கின்ற கிறிஸ்தவத் தந்தைகள் போராடுவதாகத் தெரியவில்லை. ஆனால் இங்கு மட்டும் போராடுகின்றார்கள். அமெரிக்காவில் இருக்கின்ற கிறிஸ்தவத் தந்தைகள் அங்கு போராடவில்லை. இங்கிலாந்தில் போராடவில்லை. நண்பர் உதயகுமார் அவரது அமெரிக்கக் குடியுரிமையை ஏன்  இன்னும் திருப்பித் தராமல் இருக்கின்றார். பதில் இல்லை.

குமுதம் வார இதழின் வழக்கில் எஸ்.ஏ.பி யின் மகன் டாக்டர் ஜவஹர் பழ்னியப்பனுக்கு எதிரான வழக்கில்  பார்த்தசாரதியின் மகன் வரதராஜன் அவர் வெளிநாட்டில் குடியுரிமை பெற்றவர் ஆகவே அவருக்கு இங்கே நடக்கும் பத்திரிக்கையில் உரிமை இருக்க்க் கூடாது என்று வாதிடுகின்றார் என்றால். வெளி நாட்டுக் குடிமகனாக இருக்கும் நண்ப உதய குமாருக்கும் அது பொருந்தும் தானே. என்ன புரிகின்றது ஒன்றும் புரியவில்லை.


Thursday, September 13, 2012

எல்லாம் அரசியல்

அணு மின் நிலையத்தால் ஆபத்து. உதயகுமார் தலை மறைவு. துப்பாக்கிச் சூட்டில் பலியான மீனவர் குடும்பத்தினர்க்கு வை.கோ. ஆறுதல். சரண்டைந்து விடாதீர்கள். தலைமறைவாகவே இருங்கள் கேஜ்ரிவால் வேண்டுகோள்.

விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளால்தான் இயற்கையை இழந்து நிற்கின்றோம். மழை இல்லை. பருவங்கள். பொய்க்கின்றன. நான் ஒரு கவிதையில் சொல்லியிருந்தேன்

                        ஒசோன்
                        படல
                        ஒட்டை குறித்து
                        அறிஞர்கள்
                        கூட்டம்
                        ஏ.சி. அறையில்

இதுதான் நடக்கின்றது. அரசியல் அரசியல் எல்லாவற்றிலும் அரசியல்.

சுற்றுப்புறச் சூழல் மாசு பட்டிருப்பது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கின்ற
இரு சக்கர நான்கு சக்கர வாகனங்களால்.உள்ளாடை தயாரிப்பில் சிறந்து விளங்கும் திருப்பூர் சாயக் கழிவுகளால் தான் அப்பகுதியில் இயற்கை அளித்துள்ள ஆறுகள் அனைத்தும் குடி நீருக்கும் பயன் படுவதில்லை. வேளாண்மைக்கும் பயன் படுவதில்லை.

எந்த ஆலையானாலும் அந்தப் பகுதி மக்களின் உடல் நலத்தைப் பாதிப்ப்து தான்.

மறந்து விடாதீர்கள். அது குறித்து எந்த வருத்தமும் வை.கோ.அவர்களுக்கும் இல்லை அண்ணன் நெடுமாற்னுக்கும் இல்லை. தோழர் நல்லகண்ணுக்கும் இல்லை.

சென்னை மாநகரப் பெருக்கத்தில் சுற்றியுள்ள பல வேளாண் கிராமங்கள் அழிக்கப் பட்டனவே அது குறிதது இவர்கள் போராட்டங்கள் நடத்தவில்லை.

விளை நிலங்களும் ஏரிகளும் குளங்களும் கால்வாய்களும் கல்வி நிலையங்கள் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப் பட்ட போது இவர்கள் போராடவில்லை.

கோகோ கோலா நிறுவனம் நம் ஆறுகளில் இருந்துதான் தண்ணீர் எடுத்து விற்கின்றன. யாரும் அதனை தடுக்கவில்லை.

எல்லாவற்றிற்கு மின்சாரம் என்று இயற்கையாக வாழ்வதிலிருந்து மக்களை
மாற்றியாகி விட்டது.

மின் தட்டுப் பாடு என்றால் உடன் கருணாநிதி ஆண்டாலும் ஜெயலலிதா ஆண்டாலும் இவர்கள் தான் கண்டன் ஆர்ப்பாட்டங்கள் நடத்துகின்றனர்.
மின்சாரத்தை மரத்திலிருந்து பறிக்க முடியாது என்று இவர்களுக்குத் தெரியும்

பழைய காலம் போல இயற்கையோடு இயைந்து வாழவது என்று முடிவெத்தால் தான் இந்த் துன்பங்களிலிருந்து மீள முடியும். எல்லா விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளையும்  தூக்கி எறிய. இந்தத் தலைவர்கள் முன் வருவார்களா.

மின் கசிவால் வேறு அரசாங்கத்தின் முக்கியமான கோப்புக்களெல்லாம் எரிந்து போய் விடுகின்றன. ஆகவே மின்சாரம் பல அரசியல் வாதிகளைக் காப்பாற்றி விடுகின்றது.

நாம் மின்சாரம் இல்லாத ஒரு வாழ்க்கைக்கு மக்களை மாற்றியே தீர வேண்டும்.

நாம் உண்ணுகின்ற உணவுப் பொருட்கள் நமக்கு நன்மை செய்பவையா. எல்லாம் மின்சாரம் வந்த பிறகு மோசம்தான்.நமது பெண்கள் அறுவை சிகிச்சை மூலம் தான் குழந்தையை எடுக்கின்றார்களே ஒழிய பெறுவதில்லை.காரணம் முடிவதில்லை. ஆட்டுரல் அம்மி எல்லாம் அவர்களுக்கு இடுப்பைப் பலப் படுத்தின .பெற்றுக் கொண்டார்கள்.இன்று.
விஞ்ஞானக் கண்டு பிடிப்புகள் அவர்களை எந்த வேலையும் செய்ய விடாமல் தவிர்த்து விடுகின்றன. பிறகு உடல் குறைக்க மருந்துகள். உடற் பயிற்சிக் கூடங்கள்.

இயற்கையாக வாழ்வோம். எல்லா விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளையும் புறக்கணிப்போம்
ஆலைகளை யெல்லாம் மூடுவோம். உடனே இந்தத் தலைவர்கள்தாம் ஆகா எத்தனை பேர் வேலை வாய்ப்புப் பறி போகின்றது கூக்கூரல் இடுவார்கள்.

ஆட்டோவில் பள்ளிக் குழந்தகளை அதிக அளவு ஏற்றிச் செல்வதில் விபத்துகள் ஏற்படும் நேரம் கொடுமையாக ஆகின்றது என்று கட்டுப் படுத்தினால் ஆட்டோ தொழிலாளி வயற்றில் அடிக்காதே என்று இவர்களே தான் கோஷம் போடுகின்றனர்.

வேளாண் தொழிலுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. பீடி சுற்றுவதில் வருமானம் அதிகம். பீடி சுற்றுகின்ற பெண்களுக்கே காச நோய் வருகின்றது. குடிப்பவனுக்கும் கேடு செய்கின்றது. வேளாண் தொழில் ஆரோக்கியம் தரும்.

எல்லா விளை நிலங்களும் பல மாடிக் கட்டிடங்களாகின்றன. இந்தத் தலைவர்கள் அதற்காகப் போராடுகின்றனரா. இல்லை

கிரானைட் கற்கள் விஷயத்தில் இத்தனை பெரிய திருட்டுத் தனங்கள் நடந்திருக்கின்றன.இந்தத் தலைவர்கள் அது குறித்துப் பேசவேயில்லையே.
ஏன்.

நான் ஒரு கவிதையில் சொல்லியிருந்தேன்

உர
விலையைக் குறை
கூலியை
உயர்த்திக்
கொடு
நெல்லின்
விலையை
உயர்த்து

அரிசி
விலையை
உயர்த்தாதே

எல்லாம் அரசியல் வேறொன்றுமில்லை.

Monday, September 3, 2012

பெணகளை பேணுங்கள்

ஒரு பெண் பலரைத் திருமணம் செய்து ஏமாற்றியிருக்கின்றார் என்று கைது செய்யப் பட்டிருக்கின்றார்.

ஒரு பெண் தான் ஒரு ஆணோடு கொண்டிருந்த உறவை பார்த்ததாக சிறுவனைக் கொலை செய்திருக்கின்றார்.

ஒரு பெண் சொந்த மகனையே தனது ஆண் ந்ண்பனின் உறவுக்காகக் கொலை செய்திருக்கின்றாள்.


நமது ஊடகங்கள் உடனே இது குறித்துப் பரபரப்பாகச் செய்திகள் வெளியிடுகின்றன.

ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டுமென்றால் அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லி வைத்துள்ளனர். தாயைத் தண்ணீர்க் கரையிலே பார்த்தால் மகளை வீட்டில் பார்க்க வேண்டம் என்பார்கள்.

தொலைபேசியில் ஒரு பெண் அழைத்த உடன் அவள் அழகாயிருக்கின்றாள்
என்ற உடன் அவளுக்கு கேட்ட பணம் எல்லாம் தந்து அவளைத் திருமணம் செய்து கொண்ட இந்த ஆண்களை என்ன செய்வது.

பெரியவர்களுக்குத் தெரியாமல் செய்தால் கூட நண்பர்கள் இருப்பார்கள் தானே .அவர்கள் மூலமாக விசாரித்துத் தெரிந்து கொண்டிருக்கலாம் தானே.
அழகான் பெண் என்றவுடன் நண்பர்கள் பார்த்து விடக் கூடாது என்ற எண்ணம் தானே காரணம்.

பழகியவுடன் பணம் கேட்கின்றாளே என்ற எண்ணம் கூட எல்லாமல் பணம் தந்திருக்கின்றார்களே. இங்கே காதல் எங்கே வருகின்றது. உடல் வெறும் உடல். முதலிலேயே உறவிற்கு சம்மதிக்கின்றாளே என்று கூட யோசனையில்லையே. உடலை விரும்பியவர்கள் தானே இவர்கள். அருள் கூர்ந்து இதைக் காதல் என்று சொலாதீர்கள்.

அண்ணி தன் கொழுந்தனைச் சிறுவனைக் கொல்லுகின்றாள்.தாய் மகனைக் கொல்ல முயலுகின்றாள்.

இங்கேயும் உடல் பெண்ணிற்கு இருக்கின்றது. அதற்கான உணர்வுகள் எப்படிப்
பட்டவை அதற்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டிய ஆண்கள் தங்களுக்குப் பயன்பட மட்டும் தான் பெண்ணின் உடல் என்று கருதுவதனால்
வரும் கேடு தானே.அந்தப் பெண்ணின் உடலுக்குத் தேவையான உதவிகளை
முறையாகச் செய்வது ஆணின் கடமை என்பதனை மற்ப்பதனாலும் மறைப்ப
தனாலும் விளைகின்ற கொடுமைதானே

இவர்கள் நல்ல காதலை(காமத்தை) அவர்களுக்குத் தராத போதும் இவர்கள்
அது குறித்த சிந்தனையே இல்லாமல் இருக்கின்ற போதும் .சில நேரம் இவர்களால் இயலாத போதும் சாய்ந்து கொள்ள ஒரு தோள் தருபவனிடம் சரியாக அவள் உணர்வுகளைப் புரிந்து கொண்டவனோடு அவள் போனால் அதை கள்ளக் காதல் என்கின்றீர்கள். தன்னைப் புரிந்து கொள்ளாமல் இந்தச்
சமூகம்  அவதூறு பரப்பும் என்கின்ற  அச்ச உணர்வு பார்த்து விட்ட குழந்தையைக் கொல்லும் அளவிற்கு அவர்களைத் தள்ளி விடுகின்றது என்று
எந்த ஆடவனாவது உணர்கின்றானா.அவளைப் பொறுத்த வரையில் நாம் சொல்லுகின்ற கள்ளக் காதலன் தானே நல்ல காதல் தந்தான்.

பாரதி சொல்லுவான்

பேணுமொரு ஆண் மகனின் காதலினை வேண் டியன்றோ
பெண் மக்கள் கற்பு நிலை பிறழுகின்றார் என்று.

நம்மைப் பேணுகின்ற பெண்ணை நாம் பேண வேண்டாமா.