Friday, November 30, 2012

இவர்கள்

பலர் என்னை விழுந்து வண்ங்குகின்றனர். சொன்னாலும் கேட்பதில்லை. அதில் சிலர் தீடீரென்று வணங்குவதை நிறுத்தி விடுகின்றனர். மனம் நிம்மதி பெறுகின்றது.

ஒரு கவிஞர் இப்படித்தான் என்னை அவரும் நானும் கலந்து கொள்ளும் விழாக்களிலெல்லாம் விழுந்து வணங்குவார்.அவ்ர் திரைபடத்தில் பாட்டு எழுதுவதால் ஒவ்வொரு ஊரிலும் சில நண்பர்கள் அவருக்குக் கிடைத்து விட்டனர்.

அண்மையில் எங்கள் மாவட்டத்தில் ஒரு நிகழ்விற்கு வந்திருந்தார். அவரது புதிய நண்பர்கள் மூன்று பேர் உடன் வந்திருந்தனர். தம்பி என்று நான் வாய் நிறைய அழைப்பேன். அவரும் எங்கள் ஊர் வழக்கத்தில் அண்ணாச்சி என்று வாய் நிறைய அழைப்பார். அந்த மேடையில்  அவர் என்னை விழுந்து வணங்கவில்லை. நான் மன நிறைவடைந்தேன்.

பிறகு பெரியவர்கள் சொன்ன செய்தி தான் என்க்கு அதிர்ச்சியைத் தந்தது. அவர்களிடம் அவர் ஏதோ  அன்றுதான் என்னோடு ஒரே மேடையில் ஏறினாற் போலும் நான் அவரை அன்பொழுக தம்பி என்று அழைத்ததிலும் அவர் தலையைத் தடவிக் கொடுத்ததிலும் அவர் வியப்படைந்ததாகவும் தெரிவித்திருக்கின்றார். அதில் என்ன கொடுமை என்றால் அந்தப் பெரியவர்கள் அனைவரிடமும் எனது நிகழ்வுகளின் ஒளிக் குறுந்தகடுகள் அனைத்தும் உண்டு. அவர்களில் பலர் நெல்லையில் நடந்த எனது விழாக்
க்ளில் பங்கேற்றவர்கள். இந்தத் திரைப்படக் கவிஞர் என்னருகில் இருந்து கலந்து கொண்ட நிகழ்ச்சிகள். எனது காலில் விழுந்து வணங்கிய நிகழ்ச்சிகள் அனைத்தையும் நேரில் கண்டவர்கள். அவர்கள் என்னிடம் தங்களது வருத்தங்களை பகிர்ந்து கொண்டனர். என்க்கு ஒன்றும் புரியவில்லை. நான் அன்பு மயமானவன்.

இன்னும் சிலர் நம்மிடம் மிகுந்த அன்பு பூண்டிருப்பதாக சிறப்பாக நடிப்பர்.
அது பொறுதுக் கொள்ள முடியாத அளவிற்கு நம்மை துன்புறுத்தும். பெரிய
பணக்காரர்களாக வேறு இருப்பர். அவர்கள் ந்ம்மோடு வந்து அமர்ந்து கொள்வதனாலேயே தரமானவர்கள் நல்லவர்கள் ந்ல்ல தமிழறிந்தவர்கள் நம் அருகில் வர முடியாமல் தவிப்பார்கள். எனது நல்ல நண்பர் ஒருவர் ஒரு சிறப்பான வழியைச் சொன்னார். இன்று நிம்மதியாக இருக்கின்றேன்.

ஆமாம் என் மீது உயிரையே வைத்திருப்பதாகவும் என்ன வேண்டுமானாலும் எனக்குச் செய்ய உறுதி பூண்டிருப்பதாகவும் எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கும் அந்த நண்பர்களிடம் ஒரு அவசரத் தேவை கொஞசம் பண உத்வி வேண்டும் என்று கேட்டவுடன் அவர்கள் என்மீது வைத்திருந்த உயிரை உடனே எடுத்துப் பத்திரப் படுத்திக் கொண்டார்கள். நிம்மதி.

Thursday, November 29, 2012

அம்மானைப் பாராட்டுங்கள் மற்ற செய்திகள் உங்கள் சிந்தனைக்காக

ஹிந்தியில் சீ தொலைக்காட்சியில் சரிகமப என்ற நிகழ்ச்சி ஒன்று ஒளி பரப்பா
கின்றது. சனி ஞாயிறு தோறும் இரவு மொஹம்மது அம்மான் என்கின்ற ஒரு 20 வயது இளைஞர் இந்துஸ்தானி சங்கீதம் பாடுகின்றார். இறைவனின் சிறந்த படைப்பு அந்த இளைஞன்.

ஒரு பெண் காவல் அதிகாரி புதுக் கோட்டையில் மாற்றான் படத்திற்கு இலவச
அனுமதிச் சீட்டு கேட்டிருக்கின்றார். அவரை காவல் மேலிடம் உடனே வேற்று மாவட்டத்திற்கு மாற்றி விட்டது

ஒரு காவலர் அல்ல. அதிகாரி. அதுவும் பெண். மாறுதல் என்கின்ற பெரிய தண்டணையை கொடுத்த காவற்றுறை அதிகாரிகளை எல்லோரும் பாராட்டுங்கள்.

 காரைக்காலில் தன்னைக் காதலிக்கச் சொல்லி ஒரு கொத்தனார் தொழில் செய்கின்ற இளைஞன் ஒரு பெண் பொறியாளரை ஒரு தலையாகக் காதலித்து இடையூறு செய்து கடைசியில் அவளது முகத்தில் ஆசிட்டை ஊற்றி அவரது கண்கள் பறி போயிருக்கின்றன. ந்மது திரைப் படங்கள் எத்தனை விதமான மோசமான ஆசைகளை நமது இளைஞர்களிடம் ஏற்படுத்துகின்றன.

Sunday, November 4, 2012

மறக்க முடியாதவர்கள்

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி நிறைவு பெற்று விட்டது. சிறுவர் ஆஷிக் வெற்றி பெற்றூள்ளான். மிக நன்றாகவே பாடிய அவௌக்கு பரிசளிக்கப் பட்டது சரியே.

ஆனால் முதலில் இருந்தே கெளதமை ஒழிக்க நினைத்த நீதிபதிகள் சிலரைக் குறித்து மனதில் வேதனையாகவே இருந்தது.

மிகப் பெரிய கர்நாடக சங்கீத மேதைகளான அருணா சாய்ராம் அவர்களாலேயே கெளதம் கடவுளின் அருள் என்று  போற்றப் பட்ட பிறகும் பாம்பே சகோதரிகள் சுதா ரகுநாதன் நித்யஸ்ரீ மகாதேவன் உண்ணி கிருஷ்ணன் போன்றவர்கள் பாடகர் சீனுவாஸ் ஒரு நேரடி நிகழ்ச்சியிலே இப்படி இது வரை யாரும் பாடி நான் கேட்டதில்லை  என்றதோடு மட்டுமல்லாமல் காதல் பட பாடலை கெளதம் பாடிய போது அவர் நெகிழ்ந்து போனதும் சித்ரா அம்மா ஒரு தாயுள்ளத்தோடு அவரைப் பாராட்டிய போதும் ஒரு கிராமத்துச் சிறுவன் சங்கீதத்திற்கே சம்பந்தம் இல்லாத கிராமத்திலேயிருந்து வந்து பாடுகின்றான்
என்ற நினைவே இல்லாமல் அவன் குத்துப் பாடல்கள் பாட மட்டும் தெரிந்தவன் என்பது போல மால்குடி சுபாவும் தம்பி மனோவும் அவனை ஒவ்வொரு முறையும் அவமானப் படுத்த முயன்றது புரியவில்லை. அதிலும் மனோ அப்படி நடந்து கொண்டதே எல்லோருக்கும் வருத்தம் தந்தது. சித்ரா அம்மா நீ குத்துப் பாட்டு பாடுகின்றவன் என்று சொன்னவர்களுக்கெல்லாம் நீ
இன்றைக்குப் பதிலடி கொடுத்திருக்கின்றாய் என்றதற்குப் பிறகும் மால்குடி சுபா ஜிஞ்ன்க்க்டி யிலிருந்து மாறிட்டியே என்றது அநாகரிகத்தின் உச்சக்கட்டம்.வெறும் போட்டியாளர்களாகக் கருதாமல் அவர்களின் பின்புலமும் போட்டிகளில் கவனிக்கப் பட வேண்டிய ஒன்று.

ஹரிசரண் திருப்பதி வந்தா திருப்பம் என்ற பாடலை கெளதம் பாடியபோது உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது பாடியவரா நீங்கள் என்று கேட்டதும் சுசித்ரா ஒரு சின்ன சங்கர் மகாதேவன் உருவாவதைக் காண்கின்றேன் என்றதும்.மிகச் சிறப்பாக பாடக் கூடியவன் குரல் மாற்றத்தினால் இவனுக்கு சிக்கல் ஏற்பட்டிருப்பதை சொல்லி பாராட்டிய ஹரிஹரனும் மீண்டும் நீ இந்தியாவின் மிகப் பெரிய பாடகனாக விளங்குவாய் என்ற சுதா ரகுநாதன் அவர்களும் மறக்க முடியாதவர்கள்.