Monday, June 24, 2013

கண்ணதாசக் கோமகனை

படைத்தவனும் தமிழருக்காய் படைத்தளித்தான்
பாடல் பேச்சு எழுத் தறிந்த பாவலனை
கிடைத்த எந்தப் பொருளையுமே பாடலாக்கும்
கேள்விகளின் நாயகனை செட்டி நாட்டைக்
கொடித்தலமாய் ஆக்கி புகழ் சேர்த்தவனை
கொற்றவனை கண்ணதாசக் கோமகனை
பனித் தமிழாள் நமக்களித்த் இந்த நாளைப்
பைந்தமிழர் எல்லோரும் போற்றி நிற்போம்

0 மறுமொழிகள்: