Friday, July 19, 2013

என்றும் பயணம் செய்வான்

அரங்கன் அவன் அருளாலே திருவரங்கத்து
அரங்கன் அவன் ந்ண்பனால் வாலியானான்
கிறங்குகின்ற போதவனை செட்டி நாட்டு
கிருஷ்ண் பக்தன் கண்ணதாசன் பாடல் ஓன்று
மயங்குவதும் தயங்குவதும்  வேண்டாம் என்ற
மறை மொழியால் மனம் உறுதி கொள்ளச் செய்ய
மய்ங்குகின்ற பாடல்களால் தமிழாம் தாயை
மாண்பமையச் செய்த வாலி  இல்லை என்றார்


புரிகின்றது நண்பர்களே உடலை விட்டால்
போய் விட்டார் என்பதுவே நம் வழக்கம்
அறிவுடையோர் மட்டுமே உணர்வார் நன்கு
அரங்கன் வாலி அரங்கனிடம் சரணடைந்தான்
தெளிவோடு வாழ்ந்த அந்தத் தெய்வமகன்
தீர்க்கமாய் தமிழோடு வாழ்வான் என்றும்
பணிவோடு சொல்லுகின்றேன் கவிஞர் வாலி
பைந்தமிழரோடு என்றும் பயணம் செய்வான்

1 மறுமொழிகள்:

said...

கவிஞரே பாராட்டிய ஒரு "வாலி" பக்கவிஞன்

by
I S SUNDARAKANNAN