Tuesday, July 9, 2013

சிந்தனைக்கு

ஊழல் செய்த அமைச்சருக்கு மரணதண்டனை.பதறி விடாதீர்கள். சீனாவில்.



கனிமொழி மாநிலங்களவை உறுப்பினர் ஆகி விட்டார். இனிமேல் தமிழர்கள் மகிழ்ச்சியாக வாழலாம்.பல நாட்கள் டி.ஆர்.பாலு சோனியாகாந்தியைச் சந்தித்து ஆதரவு கேட்டு மான உணர்வே இல்லாமல் காங்கிரஸ் ஆதரவு தந்து  காக்கை பாடினியார் கனிமொழி வெற்றி பெற்ற மறு நாள் தமிழர்களுக்காகவே (அழகிரி ஸ்டாலின் கனிமொழி ) வாழும் மாமனிதர் கருணாநிதி சொல்லுகின்றார். காங்கிர்ஸோடு எங்களுக்கு ஒட்டும் கிடையாது உறவும் கிடையாது. உடனே காங்கிரஸ் செயலாளர் முகுல் வாஸ்னிக்கும்  எங்களுக்கும் திமுகவிற்கும் உறவு இல்லை என்கின்றார். யாருக்கு மானமும் வெட்கமுமில்லை எனப்தனைக் கூட நாம் கண்டு பிடித்து விடாமல்  ந்ம்மைக் குழப்புகின்ற காங்கிரஸையும் திமுகவையும் பார்த்து எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கின்றது.

1 மறுமொழிகள்:

said...

நகைசுவைக்கேனும் மாமனிதரென தகுதியில்லாதவரை குறிப்பிடாதீர்கள்.வாக்கிற்கு பலம் உண்டு.அவர் மாமனிதராகிவிட்டால் பின்னர் மானம் கெட்டவர்களை அவர்பெயரில் அழைப்பதா?