Wednesday, August 28, 2013

என்ன் செய்ய்

இன்று செய்தித் தாள்க்ள் தந்துள்ள செய்திகள். இந்திய ஆட்சிப் பணித் துறைக்கு ஒன்றாகப் படிக்கும் பொது காதலித்து விட்டு இப்போது 2 கிலோ தங்கம் 50 இலட்ச்ம் ரொக்கம் கேட்கின்றவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது அவர் பணியில் நியமிக்கப் பட்டுள்ளர் என்று அவரைக் காதலித்த பெண் குற்றஞ்சாட்டுகின்றார். நாகர்கோயிலில் ஒரு பொறியியற் கல்லூரி மாணவி பேராசிரியப் பெருமகன் ஒருவரால் காதலித்துக் கை விடப் பட்டதனால் உயிர். துறந்திருக்கின்றார்.

வயது முற்றிய பின் வரும் காதலே மாசுடைத்த்து தெய்வதம்  அன்று காண்
இயலு புன்மை உடலினுக் கின்பெனும் எண்ணமே சிறிதேன்றதக் காதலாம் என்கின்றான் பாரதி.

உடல் கிடைத்த பின்னர் மனம் செத்துப் போகின்றது. என்ன செய்ய.

Tuesday, August 27, 2013

எல்லாம் தேர்தலுக்குத் தான்

உணவுப் பாதுகாப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டு விட்டது. பாஜக தலைவர் திரு முரளி மனோகர் ஜோஷி தேர்தலுக்காகத் தானே 4 வது ஆண்டில் இதனை நிறைவேற்றுகின்றீர்கள் என்று காங்கிரஸை குற்றம் சாட்டுகின்றார்.                                                                                                                                                           ஆனால் பாஜகவோ இத்தனை நாள் சும்மா இருந்து விட்டு விஸ்வ ஹிந்து பரிஷத்தை வைத்து இராமர் கோயில் விவ்காரத்தைக் கிள்ப்புகின்றது. அதுவும் தேரதலுக்காகத் தானே.                                                                                                                                  ஆட்சியைக் கைப்பற்றத்தான் எல்லா அரசியல் இயக்கங்களும் வெட்கமின்றிச் செயல் படுகின்றன் எனபதைத் தான் இது காட்டுகின்றது.                                                           தெற்கே ஐயப்பன் வழிபாட்டிற்குச் செல்லும் பக்தர்கள் வாபர் சமாதியில் வழி பாடு செய்து விட்டுப் பின்னர் தான் ஐயப்பனை வழிபடுகின்றனர். நான் எனது வா மீத முலை கவிதை நூலில் எழுதியிருந்தேன்                                                             வாபர் அய்யப்பன                                                                                                                               வ்ழிபாட்டுறவை                                                                                                                                     பாபர்                                                                                                                                                                     ராமருக்கும்                                                                                                                                                          நீட்டித்                                                                                                                                                     தொலையுங்கள்       என்று

Thursday, August 15, 2013

விடுதலை நாள்

இன்று விடுதலை நாள் இந்தியத் தலைமையமைச்சர் மாநில முதல்வர்கள் அனைவரும் கோட்டை கொத்தளங்களில் கொடியேற்றுகின்றனர்(கறுப்புப் பூனை பாதுகாப்போடு).ஆனால் அந்த மேடைகளில் நின்றுகொண்டு நம்மை பாதுகாப்பதில் அவர்கள் எப்படியெல்லாம் இது வரை செயல்பட்டார்கள் இனிமேல் செயல்படப் போகின்றார்கள் என்பதையெல்லாம் தங்கள் உரைக்ளில் குறிப்பிடுகின்றனர்.

மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அந்தந்த மாவட்டங்களில் கொடியேற்றுகின்றனர். எந்த நேரம் மாற்றப் படுவோம் என்பதனையே தெரிந்து கொள்ள முடியாதவர்களாக.

வெள்ளையன் விதைத்த விஷ் விதையில் மத  மோதல்களில் நவகாளி பற்றி எரிந்த போது எந்த விதப் பாதுகாப்புமின்றி அங்கே  சென்றார் தேசத் தந்தை காந்தியடிகள். பாதுகாப்பிற்கு அனுப்பப் பட்ட ராணுவம் வெளியேறிய பிற்கே.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நிதிஷ் குமார் தமிழக முதல்வர் மூவரும் அடுத்த பிரதமர் வேட்பாளர்கள்.

தி மு கவின் மிக மூத்த தலைவர்கள் இருக்கும் இடத்தில் கருணாநிதியின் மகள் கனிமொழி மாநிலங்களவை திமுக் உறுப்பினர்களுக்குத் தலைவராக அறிவிக்கப் பட்டிருக்கின்றார்.

சோனியா அம்மையாரின் மருமகன் மிகப் பெரிய குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக்கப் பட்டிருக்கின்றார். அது குறித்து அவர் வெட்கப் பட்டதாகவும் தெரியவில்லை. வாய் திறப்பதாகவும் தெரியவில்லை.

சபர்மதி ஆசிரமத்தில் விதி முறைகளை மீறி மாலை ஆறு மணிக்கு மேல் தனது மகனுக்கு உணவளித்த் க்ஸ்தூரிபாய் காந்தியையும் மகனையும் இரவோடு இரவாக ஆசிரமத்தை விட்டு வெளியேற்றினார் காந்தி மகான்..

பெற்ற தாய் ஒரு 50 ரூபாய் அதிகம் கேட்டும் தர ம்றுத்தார் காமராஜர் எனும் மாமனிதர்.

அரியலூர் ரயில் விபத்து நடந்த உடனேயே அமைச்சர் பதவ்யை ராஜினாமா செய்தனர் அன்றைய அமைச்சர்களான் லால் பகதூர் சாஸ்திரியும் அழகேசனும்.

சுப்ரமணிய சாமி பாஜகவில் சேர்ந்து விட்டார் அவரைத் தொடர்ந்து எடியூரப்பாவும் சேரப் போகினறாராம்.

அரசியல் சூதுகளை உணர்ந்தவுடன் முதல் அமைச்சர் பதவியைத் துறந்து வடலூர் சென்று சொத்துகள் அனைத்தையும் சன்மார்க்க சங்கத்திற்கு எழுதி வைத்து விட்டு பின்னர் அரசியல் பக்கமே திரும்பாமல் வாழ்ந்தார் ஒமந்தூரார்.

குறுகிய காலத்தில் கோடீஸ்வரார்களானவர்களெல்லாம் மத்திய மைச்சர்கள் மாநில அமைச்சர்களாகி விடுகின்றனர்.

ஏழைகள் மட்டும் ஏழைகளாகவே வாக்களிப்பதற்காக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

சாதி மதத் தலைவர்களோ சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆந்திராவிலும் கேரளத்திலும் வடநாடுகளிலும் விஜயின் தலைவா படம் திரையிடப் பட்டு விட்டது.. தமிழ்ப்படம் தான். இது வரை தமிழக வரலாற்றிலேயே இல்லாத வகையில் தமிழ்ப் படம் தமிநாட்டில்  திரையிடத் தடை. புரியவில்லை.

விட்டு விடப் போகுதுயிர் விட்டு விட்ட உடனே உடலை
சுட்டு விடப் போகின்றார் சுற்றத்தார்

என்கின்றார் பட்டினத்துப் பிள்ளை




Saturday, August 10, 2013

வெட்கமில்லை வெட்கமில்லை இங்கு யாருக்கும் வெட்கமில்லை

நாடாளுமன்றம் வழக்கம் போல் செயல்பட எதிர்க்கட்சிகள் அனுமதிக்க வில்லை .யார் ஆண்டாலும் இதுதான் நிலை. பா.ஜ.க். காங்கிரஸ் எதுவெனிலும் இதுதான் நிலை.

ஆனால் உச்சநீதி மன்ற்ம் ஊழல் அரசியல்வாதிகள் மீது  கிரிமினல் வழக்குகள் இருந்தால் அவர்களை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்றவுடன். பா.ஜ.க. காங்கிரஸ் என்று எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்றாகச் சேர்ந்து விட்டன. கேவலம் கம்யூனிஸ்ட்களும்.உச்ச நீதிமன்றத்தின் கையை ஒடிக்க வேண்டும். என்று முடிவெடுத்து விட்டனர் நாட்டின் மிக முக்கிய தலைவர்கள்.

சுதந்திரம் எனது பிறப்புரிமை என்றார் லோகமான்ய பால கங்காதர திலகர் பெருமான்.

பசியில் ஏழை திருடினால் சிறை. வாழ்வதற்காக பணிக்குச் செல்லும் ஏழைப் பெண்கள் கட்டாயப் படுத்தப் பட்டு பாலியல் தொழிலில் தள்ளப் பட்டால்
அவளுக்குச் சிறை

ஊழல் எங்கள் பிறப்புரிமை அதில் உச்ச நீதி மன்றம் தலையிடுவதற்கு உரிமை கிடையாது என்பதற்கான் புதிய சட்டத்தை உடனே கொண்டு வருவோம் என்கின்றனர் வெட்கமற்ற தலைவர்கள்.இவர்கள் மனமறிந்து விபச்சாரம் செய்கின்றவர்கள்.ஆனால் இவர்களுக்கு முழு நேர காவற்றுறைக் காவல்.

இவர்களில் பிரதமர் வேட்பாளர்கள் வேறு அறிவிக்கப் படுகின்றார்கள்.

வெட்கமில்லை இங்கு வெட்கமில்லை யாருக்கும் வெட்கமில்லை  என்ற பாவேந்தரின் பாடல் வரிகள் தான் நினைவைக் குடைகின்றன.

பசிப்பிணி தீர்க்கும் மருத்துவர்கள்

கிராமங்களில் ஒரு ஆண்டு கட்டாயம் பணி செய்ய வேண்டும் என்ற மைய அரசின் உத்தரவை எதிர்த்து மருத்துவர்கள் போராடுகின்றனர்.

இந்தியாவின் இதயம் கிராமங்களில்தான் இருக்கின்றது என்றார் தேசத் தந்தை.

உழவர்கள் இல்லையெனில் யாருமே இல்லை என்கின்றான் வள்ளுவப் பேராசான்.

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூ உம்
விட்டேம் என்பார்க்கும் நிலை

வள்ளுவன் இதிலே துறவிகளைக்குறிக்கின்றான் கேலியாக மனிதர்கள் விழைவதை எல்லாம் தாங்கள் விட்டு விட்டதாகச்  சொல்லுகின்ற(விடவில்லை) துறவிகள் கூட தெருவிற்கு வந்து விடுவார்கள் பசிப்பிணியால் என்கின்றான்.
குடியரசுத் தலைவர்கள் அமைச்சர் பெருமக்கள் விஞ்ஞானிகள் அறிஞர்கள் கவிஞர்கள் எழுத்தாள்ர்கள் மருத்துவர்கள் பொறியியல்  நிபுணர்கள் கலைஞர்கள்  எல்லோரும் பசிப்பிணியால் மரணத்தைச் சந்திப்பார்கள் என்கின்றார்.

அவர்கள் இருக்கின்ற இடங்களுக்குப் போவதையே கேவலமாகக் கருதுகின்றனர் நம்து பெரிய படிப்புப் படித்த மருத்துவர்கள்.

பசிப்பிணிதான் உலகத்திலேயே கொடுமையான பிணி அதனைத் தீர்க்கின்ற உழவர்கள் இருக்கும் இடத்திற்கு செல்ல மாட்டேன் என்று கூறுகின்ற இவர்களை என்ன் செய்ய.

அதுவும் கூட ஒரு விதத்தில் நல்லதுதான். எளிமையான மருத்துவ முறைகள் உழவர்களிடம்தான் இருக்கின்றன். பக்க விளைவுகளற்ற அந்த மருத்துவத்தில் அவர்கள் பிழைத்துப் போகட்டும் என்று நமது மருத்துவர்கள் கருதுகின்ற்னர் போலும்..சேவைக்கான கல்வியும் பணம் சார்ந்த்தான அவலம் இதில் தெரிகின்றது

Sunday, August 4, 2013

மேட்டூர் அணை நிரம்புகின்றது. சில நாட்களுக்கு முன்னால் நான் எழுதியிருந்தேன். கன்னட வெறியர்கள் மலையாளத்துத் துரோகிகள் என்றெல்லாம் வசை பாடாதீர்கள் என்று .இயர்கையை அழிக்கின்ற ஈன புத்தியை அரசியல் தலைவர்களின் கைக்கூலிகள் விட்டொழித்தால்  இயற்கையின் கருணை சிறந்தே விளங்கும்.