Friday, October 4, 2013

ஒன்றும் புரியவில்லை

உச்ச நீதி மன்ற்ம் ஊழல் அரசியல்வாதிகள் தேர்தலில் நிற்க தடை விதித்து தீர்ப்புச் சொன்ன அன்று அதனை எல்லா அரசியல் கட்சிகளும் எதிர்த்தன். ஜுலை 13ம் தேதி எனது வலைப்பூ தளத்திலேயே நான் எழுதியிருந்தேன். கம்யூனிஸ்ட்கள் எதிர்த்ததுதான் எனக்கு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியதையும் எழுதியிருந்தேன். காங்கிரஸ் பாஜக உட்பட எல்லோரும் ஒரு மனதாக எதிர்த்தனர். இன்று ராகுல் காந்தி அதனை கிழித்து எறிய வேண்டும் என்பதற்கு ஒரு நாள் முன்னர் பாஜகவினர் குடியரசுத் தலைவரை சந்தித்து இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர அவர் அனுமதிக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்த அன்றே எனக்குச் சிரிப்பு வந்தது. இப்போதோ  ராகுல் காந்தி மன்மோகன் சிங்கை அவமானப் படுத்தியதாக பாஜக தலைவர்கள் வருத்தப் படுகின்றனர். அவரை இவர்கள் எப்படியெல்லாம் விமரிசித்தவர்கள்.ராகுல் காந்தி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் துணைத் தலைவர். இரண்டு பொறுப்பில் இருப்பவர்.அவருக்கும் உரிமை உண்டு தானே ஒன்றும் புரியவில்லை.


கோயில்களை விட கழிப்பறைகள்தான் இன்று முக்கியத் தேவை என்று மோடி சொன்னதை விஷ்வ இந்து பரிஷத் தலைவர் ஒருவர் கண்டித்திருக்கின்றார்.

காந்திய இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் அவர்கள் மோடி பிரரதமராக வேண்டும் என்றும் தமிழகத்தின் முதல்வராக வை.கோ.அவர்கள் வர வேண்டும் என்றும் அவரது ஆசையை வெளிப்படுத்தியிருக்கின்றார். அவர் காந்தியை தெய்வமாகக் கருதுகின்றவர். பெருந்தலைவர். காமராஜரையும் போற்றுபவர். காந்தியைக் கொன்றவர்கள் யார் என்று விலாவாரியாகத் தமிழக மேடைகளில் பேசியவர். காமராஜரை உயிரோடு தீ வைக்க டெல்லியில் முயன்றவர்கள் யார் என்பதனையும் மேடைகள் தோறும் கடுமையாக விமரிசித்தவர். அவர் மோடி பிரதமர் ஆக வேண்டும் என்கின்றார். வை.கோ முதல்வர் என்பதுதான் எனக்குப் புரியவில்லை.

வை.கோ. தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத படி செய்யப் போகின்றேன் என்கின்றார். முதலில் அவர் எந்தக் கூட்டணியில் இருக்கப் போகின்றார் என்பதனையாவது அவர் தெளிவுபடுத்திக் கொள்ளட்டும். கூட்டணிகளால்தான் காங்கிரஸ்காரர்கள் தமிழ்நாட்டில் வெற்றி பெறுவார்கள். அதனால் வை.கோவின் கனவு பலிக்காது

0 மறுமொழிகள்: